இடமிருந்து வலம்
1. வீதி முகவரி தெளிவாய்ப் புரிய ஒளிகொண்டு எடுத்துச் சொல் (2,4)
5. ஒரே வகையான அணுக்களைக் கொண்ட தனிப்பொருள் (4)
6. பயணத்தில் நேர்ந்த குழப்பத்தால் கேட்ட பொருளைக் கொடுத்தால் தான் வீடு வந்து சேர முடியும் (4)
7. பெறும் செல்வத்தை எல்லாம் பெரும் செல்வமாய்ப் போட்டு வை (2)
9. உன் தவிப்பு நீங்கித் தெளிவு பெற முதலில் தேவை கொஞ்சம் ஒத்தாசை (3)
10. வெடியைப் போட்டதால் நல்ல லாபம் (3)
11. விரைவாய் விரைவாய்! அவசரம்! (5)
14. வண்டிப் புகையைத் திரும்பிப் பார்த்த சாமா சந்தேகத்தில் கேட்ட கேள்வி (2)
16. ஆட்டுக்கல்லில் அமர்ந்த குழந்தை? (3)
17. ‘ஈயடிச்சான் காப்பி’ அடி (3,2)
மேலிருந்து கீழ்
1. நாட்டுப்புறப் பாட்டு வகை (5)
2. சுதந்திரம் வேண்டும் என்றால் விட்டுக் கொடு சிரத்தை (4)
3. இல்லற இன்பங்களை வள்ளுவர் கண்ணோட்டத்தில் பாவேந்தர் விளக்கிய காவியம்(4,4)
4. கரகாட்டக்காரன் நாயகி ஆடக் குறைந்த ஆடம்பரம் இளஞ்சிவப்பு மலரானது (7)
8. அவசரப் படாமல் நிதானமாக யோசித்தால் விடை கிடைக்கலாம் (5)
9. ஆடை- தகர்த்திடு (2)
12. பேரிளம்பெண்? (3)
13. வடமொழி சூரியன் (2)
15. உரை ________ பத்தினியை … (சிலப்பதிகாரம்) (2)
விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.