விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.
புதிர் 21-க்கான விடைகள் இங்கே.
இடமிருந்து வலம்
1. மருதுவின் பிணி நீக்கியவர் (6)
4. நாட்டின் வருவாயில் நாட்டம் கொண்டு தேவையானதை எடுத்து வைத்துக் கொள் (3)
5. சுதந்திரம் பெறப் போராடியதில் தம் திசு போன பின்னும் கைதி தசை கொண்டு சாமர்த்தியமாக காட்டிய சமிக்ஞை (4, 2)
8. ஒளி வீசி இரு (3)
11. மேதகு மோகனன் மேனன்களோடு ஓடு நீக்குதல் முறையோ? (3)
14. சலசலப்புக்கு அஞ்சாத பனங்காட்டு நரிக்கு இரட்டைக் கிளவியைப் பார்த்ததும் ஒரே குதூகலம் தான் (6)
15. இதை இத்தோடு விட்டுத் தொலைக்க (1, 3)
16. மற்போர் வீரன் (4)
மேலிருந்து கீழ்
1. மத்திய தளத்தில் ஒருவித பறையிசை (5)
2. காத்திருப்போர் முகவரி சைதாப்பேட்டையில் (3)
3. சிறு மின்சாதனப் பெட்டிக்குள் சின்னப் பெண் ஒருத்தி (3)
6. திடமாகு – உடலில் பெரும் ஆற்றல் வந்திட, மாங்கு மாங்கு என்று ஒற்று நீக்கி உறுதி பெறு (4)
7. காவலரைத் திரும்பிப் பார்த்துத் திகை (2)
9. சொத்தைப் பல் கடலதில் ஒன்று விட்டு ஒன்றைப் பிடுங்கியத்தை ஒருவாறு கலந்து நிறைய சொல் (2, 2, 2)
10. எடை பார்த்தால் நேசம் ஆயிரம் (5)
12. ஆசைப் பட்டவளை அடைய நினைத்து, கடைசியில் அகப்பட்டுக் கொண்டால் தீருமோ கவலை (2, 2)
13. பருந்துக்கும் யானைக்கும் நடுவில் கை வைத்தால் என்ன விரோதமா? (3)