–
திரைப்படங்களின் பெயர்களைக் கொண்டு ஒரு சிறு புதிர் அமைத்திட ரொம்ப நாள் ஆசை. விளைவு இது. இந்தத் திரைப்படங்களில் எவற்றை எல்லாம் பார்த்திருக்கிறீர்கள் என்றும் சொல்லவும்.
பிரிண்ட் செய்து கட்டங்களை நிரப்பலாம். பிரிண்டர் இல்லாதவர்கள் ஒரு காகிதத்தில் 11 x 11 கட்டங்களை வரைந்து விடைகளை அதில் எழுதலாம்.
விடைகளைப் பின்னூட்டத்திலோ (comments பகுதியில்) அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு இமெயில் செய்தோ அனுப்பலாம்.
இடமிருந்து வலம்:
2. பெண் சிசுக்களைக் காத்திட உன் சிந்தனை வேண்டும் கருப்பு அன்னையே! (6)
4 & 10. மாறுவேடமும் ஆள்மாறாட்டமும் செய்து ஓடிக்கொண்டிருக்கையில் அன்பு செலுத்த வாய்ப்பு ஏது? (5, 5)
7. அழகு மலரும் அழைப்பு மணியும் உனக்காகத்தான். அணிந்திட வா மலரே… (2, 5)
9. இதைக் கட்ட நடுத்தரக் குடும்பம் பட்ட பாடு பாலுமகேந்திராவுக்குத் தெரியும் (2)
12. ராச பக்தி செய்த குழப்பத்தில் சிவாஜிக்கு நல்ல வரவேற்பு (5)
13. அன்றைய தினம் ஒரே திகில் (3, 2)

மேலிருந்து கீழ்:
1. உதிர்ந்த மலர்களே மகேந்திரனுக்கு மாலையாகி விட்டன (8)
2. டக்கான் ரக காரட் பொறியல் பிசைந்து தின்றதால் தலைக்கு மேல் ஆட்டம்தான் (9)
5 & 6. அண்ணனும் தம்பியும் ரொம்ப அதிசயம்தான் (4, 7)
8. சுதந்திரம் கிடைக்கத் திரும்பவும் தலையை விடு (4)
11. ஹேராயில் தரம் நடுவில் நான்கு தரம் குறைந்தபோதும் காந்தி என்ன சொல்லிவிடப் போகிறார்? (1,2)
வலமிருந்து இடம்:
3. காவேரியைத் தேடி கிருஷ்ணா கடந்து சென்ற மற்றொரு பெரிய ஆறு (4)
கீழிருந்து மேல்:
14. ஓர் இரவில் குற்றவாளி காவலாளி ஆனதைத் திரும்பவும் நினைத்துத் திகை (4)
விடைகளையும் கருத்துக்களையும் vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.