குறுக்கெழுத்து 10 – விடைகள்


புதுக்கவிதைக்கு அர்த்தம கேட்பது, நகைச்சுவையை இரண்டாம் முறை விளக்கச் சொல்வது, குறுக்கெழுத்து விடைகளுக்கு விளக்கங்கள் எல்லாம் ஒன்றுதான். இருப்பினும் ஒருசில ‘விளக்கங்களை’ இங்கு தருகிறேன்:

இடமிருந்து வலம்:

1. ஆ…காரம் – ஆகாரம் (உணவு) – பழைய நகைச்சுவை தான். பொறுத்தருள்க!

3. வாழ்வாதாரம் – அண்மையில் முல்லைப்பெரியாறு, கூடங்குளம் போன்ற இடங்களில் பெரிதும் பயன்படுத்தப்படும் சொல். வாழ்வா-சாவா, இறுதியில் தாரம் (மனைவி)

8. மமதை – மறுபடியும் றுபடியும் தைரியமாய் – சொற்களின் முதல் எழுதுக்களின் கூட்டு. (இப்படி ஒரு உத்தி குறுக்கெழுத்து வழக்கில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் ‘ஆணவத்தால்’ எழுதிய இக்குறிப்பு தகுதி பெறும் என்று நினைக்கிறேன்.)

18. பேர்+இடர் (பெயர் + துன்பம்) [இருபொருள்]

19. தாத்தாவுக்கு நான் (பேரன்) – பேரன்புடன் (பேத்திகளுக்கு இது பொருந்தாது)

மேலிருந்து கீழ்:

2. ரவிதான் – வடமொழி ஸ நீக்கப்பட்டது.

3. தாழ்வார சந்தைக் கடந்தால் (read between the lines, er… between the words)

4. … வர, தாவியவரில் (வரி போக) – தாவரவியல் (anagram)

மற்றவை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அடுத்த புதிரில் சந்திப்போம்.

பின்னூட்டமொன்றை இடுக