புதுக்கவிதைக்கு அர்த்தம கேட்பது, நகைச்சுவையை இரண்டாம் முறை விளக்கச் சொல்வது, குறுக்கெழுத்து விடைகளுக்கு விளக்கங்கள் எல்லாம் ஒன்றுதான். இருப்பினும் ஒருசில ‘விளக்கங்களை’ இங்கு தருகிறேன்:
இடமிருந்து வலம்:
1. ஆ…காரம் – ஆகாரம் (உணவு) – பழைய நகைச்சுவை தான். பொறுத்தருள்க!
3. வாழ்வாதாரம் – அண்மையில் முல்லைப்பெரியாறு, கூடங்குளம் போன்ற இடங்களில் பெரிதும் பயன்படுத்தப்படும் சொல். வாழ்வா-சாவா, இறுதியில் தாரம் (மனைவி)
8. மமதை – மறுபடியும் மறுபடியும் தைரியமாய் – சொற்களின் முதல் எழுதுக்களின் கூட்டு. (இப்படி ஒரு உத்தி குறுக்கெழுத்து வழக்கில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் ‘ஆணவத்தால்’ எழுதிய இக்குறிப்பு தகுதி பெறும் என்று நினைக்கிறேன்.)
18. பேர்+இடர் (பெயர் + துன்பம்) [இருபொருள்]
19. தாத்தாவுக்கு நான் (பேரன்) – பேரன்புடன் (பேத்திகளுக்கு இது பொருந்தாது)
மேலிருந்து கீழ்:
2. ரவிதாஸன் – வடமொழி ஸ நீக்கப்பட்டது.
3. தாழ்வார சந்தைக் கடந்தால் (read between the lines, er… between the words)
4. … வர, தாவியவரில் (வரி போக) – தாவரவியல் (anagram)
மற்றவை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அடுத்த புதிரில் சந்திப்போம்.