குறுக்கெழுத்து 29 – சினிமா பாடல்கள்


திரைப்படப் பாடல்களின் முதல் சொற்களைக் கொண்டு இந்தப் புதிரை அமைத்திருக்கிறேன். 

பிரிண்ட் செய்து கட்டங்களை நிரப்பலாம். பிரிண்டர் இல்லாதவர்கள் ஒரு காகிதத்தில் 14 x 15 கட்டங்களை வரைந்து விடைகளை அதில் எழுதலாம்.

விடைகளைப் பின்னூட்டத்திலோ (comments பகுதியில்) அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு இமெயில் செய்தோ அனுப்பலாம்.

 

இடமிருந்து வலம்:

1. என் உள்ளம் மயங்கும்படி இந்த ஓவியம் என்னென்னவோ சொல்லுதடி! (5, 4)

4 & மேலிருந்து கீழ் 6. கேரள எல்லையில் நுழைந்த தமிழ்க் குருவிக்கு ஒரே கொண்டாட்டந்தான் (4. 5)

9 & மேலிருந்து கீழ் 21. இந்த இளம் பருவத்தில் ஏதோ ஒரு காட்சி தோன்றுதடி (6, 4)

10 & மேலிருந்து கீழ் 17. விசில் அடிக்க வருவாயா பாட்டி? (3, 2)

12. அழகிய வேலனே, உன் ஒப்பனை… ம்… போய்விட்டது (4)

14. 2000 ரூபாய் தாளில் பாதி அளவிற்கு பா.ஜ.க.வின் சின்னம் (4, 3)

15. மேலிருந்து கீழ் 19-ஐ பார்க்கவும்

16 & 23. கீழடி நாகரிகத் தொட்டிலில் தர்மத்தின் தலைவன் (5, 4)

17. நண்பா! நண்பா! என்று அழைத்தால் ஒருமுறை மட்டும் தோள் கொடுக்க வருகிறான் (2)

20 & 25. விழியே! கண்ணதாசனின் கடைசி வரியே! (3, 2, 2)

22. பேரின்பம் தரும் பழந்தமிழ் இசைக்கருவியை வாசிக்கிறாள் மகள் (4, 2) 

23. இடமிருந்து வலம் 16-ஐ பார்க்கவும்

24 & மே. கீ. 2. காதலனே/காதலியே, நலமா? (3, 3)

25. இடமிருந்து வலம் 20-ஐ பார்க்கவும்

மேலிருந்து கீழ்:

1. ரோஜாவுக்குத்தான் எத்தனை எத்தனை விருப்பங்கள்! (3, 3, 2)

2. இ.வ.24-ஐ பார்க்கவும்

3. ஹாங்காங் லேடி டிகிரி படித்த குழப்பத்தில் ஹாஸ்யம் மறந்துபோய் ஆடிப் பாடுகிறாள் (4, 4)

5 & 13. ரோஜா பூத்திருக்கும் விலாசம் மோகனுக்குத் தெரிய வேண்டுமாம் (2, 4)

6. இடமிருந்து வலம் 4-ஐ பார்க்கவும்

7. குற்றமற்ற ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சமான மெய்யன்பே! (3)

8. செம்மலரே! உன்னைக் காண எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும் என்பது கங்கை அமரனுக்குத்தான் தெரியும் (7)

11. பெண்களை உவமைகளால் வர்ணித்து வர்ணித்துக் கவிச்சக்கரவர்த்தியே சறுக்கிவிட்டான்! (4, 5)

13. மேலிருந்து கீழ் 5-ஐ பார்க்கவும்

17. இடமிருந்து வலம் 10-ஐ பார்க்கவும்

18. அன்பானவனே! என் விழியை பம்பாயில் இழந்துவிட்டேன். (5)

19 & இடமிருந்து வலம் 15. தாழம்பூ தலையில் சூடி நடப்பவளே! (4, 5)

21. இடமிருந்து வலம் 9-ஐ பார்க்கவும்

விடைகளையும் கருத்துக்களையும் vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.

குறுக்கெழுத்து 28 – சினிமா


திரைப்படங்களின் பெயர்களைக் கொண்டு ஒரு சிறு புதிர் அமைத்திட ரொம்ப நாள் ஆசை. விளைவு இது. இந்தத் திரைப்படங்களில் எவற்றை எல்லாம் பார்த்திருக்கிறீர்கள் என்றும் சொல்லவும். 

பிரிண்ட் செய்து கட்டங்களை நிரப்பலாம். பிரிண்டர் இல்லாதவர்கள் ஒரு காகிதத்தில் 11 x 11 கட்டங்களை வரைந்து விடைகளை அதில் எழுதலாம்.

விடைகளைப் பின்னூட்டத்திலோ (comments பகுதியில்) அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு இமெயில் செய்தோ அனுப்பலாம்.

 

இடமிருந்து வலம்:

2. பெண் சிசுக்களைக் காத்திட உன் சிந்தனை வேண்டும் கருப்பு அன்னையே! (6)

4 & 10. மாறுவேடமும் ஆள்மாறாட்டமும் செய்து ஓடிக்கொண்டிருக்கையில் அன்பு செலுத்த வாய்ப்பு ஏது? (5, 5)

7. அழகு மலரும் அழைப்பு மணியும் உனக்காகத்தான். அணிந்திட வா மலரே… (2, 5)

9. இதைக் கட்ட நடுத்தரக் குடும்பம் பட்ட பாடு பாலுமகேந்திராவுக்குத் தெரியும் (2)

12. ராச பக்தி செய்த குழப்பத்தில் சிவாஜிக்கு நல்ல வரவேற்பு (5)

13. அன்றைய தினம் ஒரே திகில் (3, 2)

மேலிருந்து கீழ்:

1. உதிர்ந்த மலர்களே மகேந்திரனுக்கு மாலையாகி விட்டன (8)

2. டக்கான் ரக காரட் பொறியல் பிசைந்து தின்றதால் தலைக்கு மேல் ஆட்டம்தான் (9)

5 & 6. அண்ணனும் தம்பியும் ரொம்ப அதிசயம்தான் (4, 7)

8. சுதந்திரம் கிடைக்கத் திரும்பவும் தலையை விடு (4)

11. ஹேராயில் தரம் நடுவில் நான்கு தரம் குறைந்தபோதும் காந்தி என்ன சொல்லிவிடப் போகிறார்? (1,2)

வலமிருந்து இடம்:

3. காவேரியைத் தேடி கிருஷ்ணா கடந்து சென்ற மற்றொரு பெரிய ஆறு (4)

கீழிருந்து மேல்:

14. ஓர் இரவில் குற்றவாளி காவலாளி ஆனதைத் திரும்பவும் நினைத்துத் திகை (4)

விடைகளையும் கருத்துக்களையும் vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.

 

இலக்யா குறுக்கெழுத்து 27 விடைகள்


பங்குபெற்ற அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும். சரியான விடைகளை அனுப்பியவர்கள் ராமராவ் மற்றும் Varghesh Vergin. இரண்டாமவர் அனுப்பிய விடைகளையே இங்கே தந்திருக்கிறேன்.

குறுக்கெழுத்து 27 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்


 

பள்ளி மாணவ, மாணவியர் வீட்டில்போர் அடித்துஅமர்ந்திருப்பீர்கள். குறுக்கெழுத்துப் போட்டியில் ஆர்வம் இருப்பவர்கள் இதை முயற்சிக்கலாம். 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். மற்றவர்களும் முயற்சி செய்யலாம்.

பிரிண்ட் செய்து கட்டங்களை நிரப்பலாம். பிரிண்டர் இல்லாதவர்கள் ஒரு காகிதத்தில் 9 x 9 கட்டங்களை வரைந்து விடைகளை அதில் எழுதலாம்.

விடைகளைப் பின்னூட்டத்திலோ (comments பகுதியில்) அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு இமெயில் செய்தோ அனுப்பலாம்.

xwrd_27

இடமிருந்து வலம்:

1. தேசிய பறவை வண்டி ஏறி வருகிறது (3, 4)

4. கடற்கரையில் ஒன்றின் பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கிறது இந்த channel (5)

6. அழகு குறைந்தபோதும் அறிவழகன் மூளைக்காரன் (3)

7. குழு அமைத்து உடுத்திக்கொள் (2)

9. சோப்பு கொண்டு அடிக்கடி இப்படிச் செய்தல் கிருமிகளை நீக்கும் (1,5)

11. சிலம்பு தேய்ந்து சிலம்பரசன் ஆகிவிட்டது (3)

13. பொருளின் மதிப்பு (2)

14. படத்தில் இருக்கும் பூச்சியின் பெயர் (3)

Dragon_fly

மேலிருந்து கீழ்:

1. ஊட்டியை இப்படியும் பெருமையாகச் சொல்வார்கள் (5,3)

2. வெயிலா மழையா புயலா என்று நமக்கு இப்படிச் சொல்வார்கள் (3, 4)

3. துணியையும் காகிதத்தையும் வெட்டப் பயன்படும் (7)

5. மாமிசம் உண்ணாதவர்களை இப்படியும் சொல்லலாம் (3)

8. தமிழில் 247 இருக்கிறது (4)

10. இளைய சகோதரன் (3)

12. உலகம் (2)

 

விடைகளையும் கருத்துக்களையும் vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.

 

http://ta.wikipedia.org/wiki/தஞ்சைப்_பிரகதீசுவரர்_கோயில்#/media/File:Sadhaya_Vizha,_Thanjai_periya_kovil.jpg

தமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்


தமிழில் வரலாற்றுப் புதினங்கள் பல இருக்கலாம். அவற்றுள் ஒரு புதினமே வரலாறு படைத்திருக்கிறது என்றால் அது அமரர் கல்கி வடித்த பொன்னியின் செல்வன் மட்டுமே. விற்பனையில் ஆகட்டும், வாசகர் வரவேற்பில் ஆகட்டும், எழுத்து நடை, கதைக்களம், என்று எல்லாவற்றிலுமே பொன்னியின் செல்வன் தான் சூப்பர் ஸ்டார். 1950-களில் வெளிவந்த இந்த நெடுந்தொடர் இன்றும் (2019) பேசப்படுவதும் போற்றப்படுவதும் இதற்கு சாட்சி. கதைமாந்தர் ஒவ்வொருவரும் சாகா வரம் பெற்று விட்டனர். புதிர்கள் நிறைந்த பொன்னியின் செல்வனை வைத்து ஒரு குறுக்கெழுத்துப் புதிர் செய்தால் ‘நேயர்களுக்கு’ பிடிக்காமல் போகுமா என்ன?

ஏற்கனவே நான் அமைத்திருந்த ஒரு புதிரை இங்கே காணலாம்.

சென்ற முறையைவிட சற்று எளிதாகவே அமைத்திருக்கிறேன். இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள் ஆழ்வார்க்கடியான் போல நண்பர்களிடமும் கூகுளிடமும் ஒட்டுக்கேட்டு விடைகளைக் கண்டுபிடிக்கலாம். விடைகளைக் கண்டுபிடித்து விட்டு ஊமையரசி போல் இருந்து விடாமல் வந்தியத்தேவனிடம் ஒரு மின்னோலையை vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு அல்லது இந்தப் புதிரின் கீழே பின்னூட்டத்தில் கொடுத்தனுப்புங்கள்.

உள் நிரப்பும் கட்டங்களைச் சோதனை முறையில் சேர்த்திருக்கிறேன். சரியான எழுத்தை உள்ளிட்டால் கட்டம் பச்சை நிறத்திற்கு மாறும். தவறான உள்ளீடு கட்டத்தைச் சிவப்பாக்கி விடும். உள்ளிட்ட எழுத்தை அழிப்பதற்கு கட்டத்தில் இரண்டு முறை சொடுக்கி பின்பு delete செய்யவும்.

‘இதெல்லாம் ஆகற வேலையா?’ என்பவர்கள் கீழே வழக்கம் போன்ற கட்டங்களைப் பார்த்தோ பிரதி எடுத்தோ விடைகள் அளிக்கலாம்.

இடமிருந்து வலம்

1. திருமேனியில் 64 போர்க் காயங்கள் கொண்டவர் (8)

3. வந்தியத்தேவன் மனதில் சோழ இளவரசியை அமரச் செய் (4)

5. அருள்மொழியும் தியாகமும், ஆழ்வார்க்கடியானும் ஆபத்தும், வந்தியத்தேவனும் விளையாட்டுத் துணிச்சலும், குந்தவையும் வானதியும், அதேபோல் வானதியும் _________ (6)

7. வந்தியத்தேவனின் முகத்துக்குப் பூங்குழலியின் உவமை; ரவிதாசனின் ரகசிய ஒலி (3)

8. தனது பாட்டனாரின் தந்தை நினைவாகக் குந்தவை நடத்தி வந்த மருத்துவமனை (6)

9. ஒரு வகையில் செம்பியன் மாதேவி அருள்மொழிவர்மனுக்கு இந்த உறவுமுறை (3)

12. வந்தியத்தேவனுக்கு கிடைத்த ‘மாய மோதிரத்தில்’ இருந்த முத்திரை (2, 5)

17. சக்கரவர்த்தியைச் சந்தித்த வந்தியத்தேவன் அவருக்கும் ராஜ்ஜியத்துக்கும் ஆபத்து என்பதை இவ்வாறு கத்தினான் (4)

18. பிணி நீக்குபவர் மைந்தன் (5)

20. பழுவேட்டரையரின் இயற்பெயர் (4, 4)

21. சிவனைப் பற்றி திருமலை அவதூறாகப் பேசியதால் இவர் அடைந்த கோபம் தணிய ஆங்கில வெண்ணெய் தான் சரி (4)

22. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் இங்கே தான் எல்லாம் தொடங்குகிறது, ஆடித் திருநாளன்று (2, 4, 2)

xwrd_PS2

மேலிருந்து கீழ்

2.  மேலே புலி, அடியில் கிரீடம். கிரீடத்துக்கு அடியில் ஒரு பலிபீடம், கழுத்து அறுபட்ட ஒரு தலை, ஒரு பெரிய பலிக் கத்தி. இவற்றை செந்நிறத்திலான தங்கள் கொடியில் கொண்டவர்கள் இவர்கள் (8)

3. குந்தவையின் ஆஸ்தான சோதிடர் இருந்த ஊர் (4)

4. கடும் காவலையும் மீறி ஆதித்தனின் ஓலையை அரசரிடம் தர வந்தியத்தேவன் துணிந்து நுழைந்த இடம் (3, 3)

6. வந்தியத்தேவன் வாளை விழுங்கி, பின்னர் அவனை அசடுவழியச் செய்த போலி விலங்கு (3)

10. திகிலையும் வியப்பையும் தந்து வந்தியத்தேவன்-கந்தமாறன் நட்பை அதல பாதாளத்துக்குத் தள்ளிய இடம் (4)

11. அருள்மொழிவர்மன் இலங்கையில் ஏற்ற மாறுவேடம் (6)

13. என்னதான் மாமிசம் உண்ணாதவனாக இருந்தாலும் ஆழ்வார்க்கடியானுக்கு இது மட்டும் பிடிப்பதில்லை (3)

14. கொள்ளிடம் அருகே அரச மரத்தடியில் மீன் சமிக்ஜை செய்து காட்டியவன் (7)

15. ஆழ்வார்க்கடியான் என்கிற திருமலை மீது நம்பிக்கை வைத்து (3)

16. காலாமுகர்களின் முன்னோர்கள் (7)

19. நோயாளியாகவும் ஒருவித கைதியாகவும் படுத்திருக்கும் அழகிய ____ சோழர் (4)

கீழிருந்து மேல்

7. திருமலையப்பன் இவருக்கு அடியான் (4)

இலக்யா குறுக்கெழுத்து 25


 

விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

இலக்யா குறுக்கெழுத்து 24-க்கான விடைகள் இங்கே.

உள் நிரப்பும் கட்டங்களைச் சோதனை முறையில் சேர்த்திருக்கிறேன். சரியான எழுத்தை உள்ளிட்டால் கட்டம் பச்சை நிறத்திற்கு மாறும். தவறான உள்ளீடு கட்டத்தைச் சிவப்பாக்கி விடும். இதில் எண்களைச் சேர்க்கும் அளவுக்கு நான் இன்னும் தேறாததால் குறிப்பு உள்ள கட்டங்களைச் சொடுக்கினால் குறிப்புகள் தெரியும்படி செய்துள்ளேன். உள்ளிட்ட எழுத்தை அழிப்பதற்கு கட்டத்தில் இரண்டு முறை சொடுக்கி பின்பு delete செய்யவும்.

‘இதெல்லாம் ஆகற வேலையா?’ என்பவர்கள் கீழே வழக்கம் போன்ற கட்டங்களைப் பார்த்தோ பிரதி எடுத்தோ விடைகள் அளிக்கலாம். புதிய கட்டம் பற்றி உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தவும்.

இடமிருந்து வலம்

1. காததை கல் கொண்டு மாற்றி அன்பு காவியமாய்ச் சொல் (3, 2)

6. வைட்டமின்-ஏ அளித்தால் அந்திப் பொழுதின் இருள் நீங்கலாம் (5)

7. நீங்களும் நானும் பார்க்க (2,2)

11. சிறுவயதுப் பட்டாம்பூச்சி உதறித் தள்ளிய போர்வை (4)

13. கோவில் வம்சத்திற்குள் இப்படி ஒரு மரம் (4)

16. தற்பெருமையால் கெட்டுப் போனாலும் பாதுகாப்புடன் வீசுகிறது காற்று (5)

17. ஒரு வீசம் கைமா கிளறிடு அன்னையே! (1, 4)

 

வலமிருந்து இடம்

10. பழங்காலத் தமிழ் முகம் (4)

மேலிருந்து கீழ்

2. கலங்கலாகத் தனது சாயம் ஆன போதும் பண்புடன் பழகும் குணம் (5)

3. ஒன்பது மாதம் ஓடிப் போனது தெரியாத கணவர் தம் மாதை இப்படியா குழப்புவது? (1, 3)

4. குடும்ப நலம் பற்றிய அரசாங்கத்தின் கோணம் (5)

5. நாட்டுப் பண் புதிய இசையில் ஒலித்தாலும் அதற்குள் மூழ்கிடும் நாட்டுப் பற்றாளரின் தன்மை (3)

7. முழுநீளக் கதை சொல்லும் கருநீலப் பழம் (3)

8. தண்ணீர் குடத்தில் கல் போடுவதற்கா கம்மென்று இருந்தது இந்தக் காக்கை? (3)

9. முதலுதவிக்கா தேடி அலையாதே என்கிறாய்? (5)

12. பணம் பல பெட்டிகளில் இருப்பது உறுதி (2,3)

14. வலம் வருகையில் நெருக்கமானவர் (3, 1)

15. மடை மாற்றிய மேதகு முதல்வருக்கு இரண்டு கொம்பு மட்டும் தான் இல்லை (3)

 

xwrd25

இலக்யா குறுக்கெழுத்து 24


 

விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

இலக்யா குறுக்கெழுத்து 23-க்கான விடைகள் இங்கே.

உள் நிரப்பும் கட்டங்களைச் சோதனை முறையில் சேர்த்திருக்கிறேன். சரியான எழுத்தை உள்ளிட்டால் கட்டம் பச்சை நிறத்திற்கு மாறும். தவறான உள்ளீடு கட்டத்தைச் சிவப்பாக்கி விடும். இதில் எண்களைச் சேர்க்கும் அளவுக்கு நான் இன்னும் தேறாததால் குறிப்பு உள்ள கட்டங்களைச் சொடுக்கினால் குறிப்புகள் தெரியும்படி செய்துள்ளேன். உள்ளிட்ட எழுத்தை அழிப்பதற்கு கட்டத்தில் இரண்டு முறை சொடுக்கி பின்பு delete செய்யவும்.

 

‘இதெல்லாம் ஆகற வேலையா?’ என்பவர்கள் கீழே வழக்கம் போன்ற கட்டங்களைப் பார்த்தோ பிரதி எடுத்தோ விடைகள் அளிக்கலாம். புதிய கட்டம் பற்றி உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தவும்.

இடமிருந்து வலம்

2. தைரியநாதசாமியிடம் போய் அரைகுறையாக மல்லுக்கட்டுவது தான் உங்கள் துணிவா? (3)

5. திரு. மதிமாறன் பாதி வரைக்கும் முழு பெண்ணாகத் தான் இருந்தார் (4)

6. நண்பா! சனம் பிழைக்க நீர் பாய்ச்சினால் தானே பயிர் விளையும்! (4)

7. வந்தியத்தேவனின் ஆருயிர் நண்பன் _____ மாறன் (3)

8. நெடுநல்வாடையை நாள்காட்டியில் தேடினால் நீண்ட காலம் தேவைப்படும் (4)

10. மரமாய் நின்று பரவு (2,2)

11. பல்குத்த உதவும் சிறுபொருள் (4)

13. போகி தொடங்கி, பொங்கலும் முடிந்தாயிற்று. காலம் எவ்வளவு விரைவாகச் செல்கிறது! (4)

17. _____ முத்தல்லவோ! (4)

18. சுற்றுச்சூழல் சீர் கெட உள்ளுக்குள் இன்னுமா சடையணிந்து வர வேண்டும்? (4)

20. பணமே, அவர் செய்த உதவிக்குக் கைம்மாறாக நீயே இங்கிருந்து அங்கு செல் (1,2)

வலமிருந்து இடம்

16. ராமனின் தோழன் (3)

மேலிருந்து கீழ்

1. காய்ந்த மீனுக்காக உட்பொருள் முதற்கொண்டு ஏங்கு (4)

2. ஒரு தெருவில் ஓடும் மதுபானம் பல தெருக்களை உருவாக்கி விட்டது (4)

3. பெரும் பாவம் செய்தவளே குழப்பத்தில் பாதமாகி விட்டாள் (4)

4. குற்றால அருவிகளில் எல்லாவற்றினும் உயரத்தில் உள்ள அருவி (4)

8. சுருங்கச் சொன்னால் நீண்டது (3)

9. குருதிக் குழாய் (3)

12. புகை பிடிப்பதற்குள் என்ன ஒரு மென்சிரிப்பு (4)

13. போ, குமாரு… கடைசி எழுத்து தப்பு! (4)

கீழிருந்து மேல்

14. சின்னஞ்சிறு கிளிப்பிள்ளை (3)

15. வரவு செலவில் ஒரு பகுதி முகம் துடைக்கவே போய் விடுகிறது (3)

19. உள்ளம் உருகாத் திருவாளர்கள் மத்தியில் நேரம் வரும் வரை பொறுமையுடன் இரு (4)

21. நடமாடும் திறனை அடைய நிகழ வேண்டியது (2,2)

இலக்யா குறுக்கெழுத்து 24

இலக்யா குறுக்கெழுத்து 23


விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

புதிர் 22-க்கான விடைகள் இங்கே.

இடமிருந்து வலம்

5. விறகு விற்கும் கடைக்குள் எட்டிப் பார்த்தால் வேறென்ன கிடைக்கும்? (3)
6. இதயத்தின் தசைகளுக்கு மசை போட்டால் உயரத்தை அடையலாம் (4)
7. சிம்புவின் நடனத்தில் லயித்த கண்ணகி காலணி (4)
8. விசை செலுத்து, வேறுருவம் கொள். இதுவே கட்டளை! (6)
9. குதிரை திக்குமுக்காடுகிறதே என்று கவலை கொள் (4)
10. பசுமை தாங்கிடும் காடுகளுக்கு உள்ளே இருக்கிறாள் நம் மாசுக்களின் நஞ்சைக் குறைக்கும் பொறுப்பாளி (5)

xwrd23

 

மேலிருந்து கீழ்

1. அதுக்குள் கமகம வாசனை வர உள்ளமது பெயரளவில் இசுலாத்தை நாடுகிறது (4)
2. சோ ராமசாமிக்கு ஆங்கிலப் பசை தந்த வாட்டம் (3)
3. இறுதியாக ஒருமுறை சிதறிக் கிடக்கும் கடை சிறிது தூர இடைவெளியில் ஒழுங்குபெற ஒருவனை அனுப்புகிறேன் (3,2)
4. பச்சோந்திகளின் சிறப்பம்சம் (3,3,3)
8. பயமறியாத் திராவிடர் உடைமை (4)
9. அந்த பகீர் தகவலைக் கொஞ்சம் நாசூக்காக வலைதள நண்பர்களுக்குச் சொல் (3)

இலக்யா குறுக்கெழுத்து 22


விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

புதிர் 21-க்கான விடைகள் இங்கே.

இடமிருந்து வலம்

1. மருதுவின் பிணி நீக்கியவர் (6)
4. நாட்டின் வருவாயில் நாட்டம் கொண்டு தேவையானதை எடுத்து வைத்துக் கொள் (3)
5. சுதந்திரம் பெறப் போராடியதில் தம் திசு போன பின்னும் கைதி தசை கொண்டு சாமர்த்தியமாக காட்டிய சமிக்ஞை (4, 2)
8. ஒளி வீசி இரு (3)
11. மேதகு மோகனன் மேனன்களோடு ஓடு நீக்குதல் முறையோ? (3)
14. சலசலப்புக்கு அஞ்சாத பனங்காட்டு நரிக்கு இரட்டைக் கிளவியைப் பார்த்ததும் ஒரே குதூகலம் தான் (6)
15. இதை இத்தோடு விட்டுத் தொலைக்க (1, 3)
16. மற்போர் வீரன் (4)

xwrd22

மேலிருந்து கீழ்

1. மத்திய தளத்தில் ஒருவித பறையிசை (5)
2. காத்திருப்போர் முகவரி சைதாப்பேட்டையில் (3)
3. சிறு மின்சாதனப் பெட்டிக்குள் சின்னப் பெண் ஒருத்தி (3)
6. திடமாகு – உடலில் பெரும் ஆற்றல் வந்திட, மாங்கு மாங்கு என்று ஒற்று நீக்கி உறுதி பெறு (4)
7. காவலரைத் திரும்பிப் பார்த்துத் திகை (2)
9. சொத்தைப் பல் கடலதில் ஒன்று விட்டு ஒன்றைப் பிடுங்கியத்தை ஒருவாறு கலந்து நிறைய சொல் (2, 2, 2)
10. எடை பார்த்தால் நேசம் ஆயிரம் (5)
12. ஆசைப் பட்டவளை அடைய நினைத்து, கடைசியில் அகப்பட்டுக் கொண்டால் தீருமோ கவலை (2, 2)
13. பருந்துக்கும் யானைக்கும் நடுவில் கை வைத்தால் என்ன விரோதமா? (3)

 

இலக்யா குறுக்கெழுத்து 21


இலக்யா குறுக்கெழுத்து 20-க்கான விடைகளைக் காண இங்கே சொடுக்கவும்.
இனி இன்றைய குறுக்கெழுத்துப் புதிர்:
இடமிருந்து வலம்
1. ஆகாயத்தின் எல்லையை எப்படியும் எட்டிப் பிடித்து விடுவான் (4)
3. மாவுப் பொருளுக்கு வண்ணம் கொடு (1,1)
7. ஒரு மதிப்பெண் கூட இழக்கவில்லை (5, 2)
9. நெற்றிப் பொட்டு (4)
10. உரக்கலவை சில களைகளையும் நீக்கியதால் ஏற்பட்ட மகிழ்ச்சி (3)
11. தான் நெற்றியில் சூடிய அணிகலனின் பெருமையை ஊரெல்லாம் முரசு அடித்துச் சொல்லாத குறைதான் (6)
12. சினிமா சினிமா என்ற பிதற்றல் தெளிவதற்குள் பங்குனியே வந்து விடுகிறது (2)
15. பாறை இடுக்கினுள் சற்றே உற்றுப் பார்த்தால் ஒரு பெரும் படையே தங்கியிருக்கிறது (3)
16. கம்பி திருடும் கள்வனைப் பார்த்ததும் கம்மென்று தப்பித்து வந்திடு (5)
17. ஓலைச் சுவடியில் எழுதும் பேனா? (2)

xwrd21

மேலிருந்து கீழ்
1. மொத்த விலை கொடுத்து சரடு வாங்கிக் கோர்த்தால் சங்க இலக்கிய புத்தகம் ஒன்று கிடைக்கிறது (2, 2)
2. முதல் இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு வந்த இல்லற வாட்டம் பந்த சொந்தங்களையும் குழப்பி, அறம் அறுக, பறக்க முடியாத பருவமாய் ஆக்கி விட்டது (5, 4)
4. மனதார கைகளுக்குள் பார்த்தால் விண்மீன் தெரியும் (3)
5. கூட்டணி கட்சிகளுடன் செய்யப்படும் ஒப்பந்தம் (3, 5)
6. வசீகரத்தால் அவளை மயக்கம் கொள்ளச் செய் (3,1)
8. நூல் அதிகம் சேர்ந்து விட்டதனால் தினம் போய் படிப்பது நலம் (4)
11. ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் சின்ன வித்தியாசம் தான் (4)
13. மிகச்சிறு வாணிபத்தில் பணம் ஆறாக ஓடுகிறது (4)
14. எடையைக் கொண்டு வெற்றிடம் நிரப்பு (2)

விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களை அறிவாளி ஆக்குமா? குறுக்கெழுத்துப் போட்டிகளில் வெல்ல சில டிப்ஸ்


 

இந்தப் பதிவில் குறுக்கெழுத்துப் புதிர்கள் எப்படி வடிவமைக்கப் படுகின்றன, கடினமான குறிப்புகளை எவ்வாறு அச்சு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடைகளைக் கண்டுபிடிப்பது என்பது பற்றி நான் அறிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில், குறுக்கெழுத்துப் புதிர்களை வைத்துக் கொண்டு இடியே விழுந்தாலும் அசராமல் பேனாவைக் கடித்துக் கொண்டிருப்பவர்கள் உண்மையில் அவ்வளவு அறிவாளிகளா?

அறிவுத்திறன் என்பதற்கு முழுமையான ஒற்றை விளக்கமோ அளவுகோலோ கிடையாது. கடினமான கணக்குகளை எளிதில் கையாளும் கணிதவியலாளர், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஆராய்ச்சியாளர், வாதப் பிரதிவாதங்களைக் கேட்டு நடுநிலையுடன் தீர்ப்பு சொல்லக் கூடிய நீதிபதி, நோய்களை அவற்றின் தன்மைகளைக் கொண்xwrd_9டு அறிந்து தீர்க்கும் மருத்துவர், காட்சிப் பிழைகளைக் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் மாயாஜாலக்காரர், உடனடியாக புதிய ஒரு விடுகதையை உருவாக்கி நம்மிடம் விடை கேட்கும் பாட்டிகள் என்று அனைவரும் அவரவர் வழிகளில் அறிவுத்திறன் மிக்கவர்களே. அதே போலத் தான் குறுக்கெழுத்துப் பிரியர்களும்.

குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதால் ஒருவருக்கு அறிவுத் திறன் வளர்கிறது என்பதற்குச் சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் அறிவுத்திறன் மிகுந்தவர்களால் தான் குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு விடையளிக்க முடியும் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

அண்மையில் நடந்த உளவியல் ஆய்வுகளில்[1] குறுக்கெழுத்துப் பிரியர்களின் தன்மைகள் பற்றி பல தகவல்கள் தெரிய வந்துள்ளன. அவற்றுள் சில:

1. இவர்களில் பெரும்பாலானவர்கள் உயர் கல்வி (பல்கலைக்கழக அளவில்) பயின்றுள்ளனர். அவர்களிலும் 10% பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

2. குறிப்பாக STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் துறைகளில் பயின்றவர்கள் இதில் அதிகம்.

3. இசை, விளையாட்டு போன்ற பிற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இவர்கள் பயிற்சிக்காக அதிக நேரம் செலவழிப்பது இல்லை.

4. மேற்கண்ட துறைகளில் கிடைக்கும் அளவுக்கு குறுக்கெழுத்து ஜாம்பவான்களுக்கு மாபெரும் பரிசுகளோ புகழோ கிடைப்பதில்லை. அதே வேளை இவர்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற நிர்பந்தமோ மன அழுத்தமோ குறைவு. ஆனால் ஆர்வம் பிற துறையினரைக் காட்டிலும் கொஞ்சமும் குறைவதில்லை. எனவே தங்கள் தினசரி வாழ்வில் ஒரு சிறு பகுதியை இந்தப் புதிர்களுக்காகச் செலவிட்டு உடல் இளைப்பாறும் அதே நேரம் மன மகிழ்ச்சியையும் பெறுகின்றனர்.

“அப்படியானால் மொழியியல், கலை, போன்ற துறையினரால் குறுக்கெழுத்து விடைகளைக் கண்டுபிடிக்க முடியாதா என்ன? எங்கே, ஒரு புதிர் கொடு பார்ப்போம்!” என்று யாரும் சண்டைக்கு வர வேண்டாம். குறுக்கெழுத்து முனைவோருக்கான ஒரு பொதுவான இயல்பு அவர்கள் சிக்கல்களைத் தீர்க்க விரும்பும் problem solvers-ஆக இருப்பது தான்.

இவை எல்லாம் பெரும்பாலும் cryptic crosswords எனப்படும் சங்கேதக் குறிப்புகள் அடங்கிய குறுக்கெழுத்துப் பிரியர்களுக்கே பொருந்தும். வாரமலரில் வரும் ‘நன்றியுள்ள விலங்கு’, ‘நேருவின் விருப்பமான மலர்’ என்பன போன்ற புதிர்களுக்குப் பெரிய அறிவுத்திறன் தேவை இல்லை.

மாறாக,

சின்ன கோபாலனின் உயரம் கோபுரம் அளவில் பாதி (2)

என்ற குறிப்பை எடுத்துக் கொள்ளலாம். இந்தப் புதிரின் விடையை கூகிள் தேடல் மூலமாக நேரடியாக அறிய முடியாது (இந்தப் புதிருக்கான விடை உள்ள இணைய தளத்துக்குச் சென்று வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம்).

இதில் கோபாலன் என்பது முக்கியமான குறிப்பு. ‘சின்ன கோபாலன்‘ என்பதை அப்படியே அர்த்தம் கொள்ளாமல் கோபாலன் என்ற பெயரைச் சுருக்கினால் கோபால் அல்லது கோபு என்று வருகிறது. கேள்வியின் அடுத்த பகுதியில் ‘கோபுரம் அளவில் பாதி‘ என்ற குறிப்பைக் கவனியுங்கள். கோபுரம் – இதில் பாதி ‘கோபு‘ என்று எடுத்துக் கொள்ளலாம்.

எனவே, சின்ன கோபாலன் = கோபுரம் அளவில் பாதி = கோபு.

இன்னொரு எடுத்துக்காட்டு:

வணிகப் பொருளுடன் ஒன்றைச் சேர்த்ததும் தங்க மழை பொழியும் பூ கிடைக்கிறது! (6)

இதையும் கூகுள் செய்து பார்க்கவும்.

கணிதப் புதிர்களைப் போல் இத்தகைய சங்கேதக் குறிப்புகளையும் அலசி ஆராய்ந்து அவற்றில் மறைந்து இருக்கும் விடையை வெளிக்கொண்டு வரும் நுட்பம் கணிதவியல் திறன் கொண்டோருக்கு எளிதில் வசப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் கணினிகளுக்கு மொழியியல் நுட்பங்களை பயிற்றுவிக்கக் குறுக்கெழுத்துக் குறிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் சங்கேதக் குறிப்புகளை decode செய்யக் குறுக்கெழுத்து வல்லுநர்களை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் பயன்படுத்தியது.

குறுக்கெழுத்துப் புதிர்களில் சங்கேதக் குறிப்புகளை அமைக்கப் பல்வேறு உத்திகள் உள்ளன. அவற்றுள் சில:

  • நேரடி குறிப்பு

தமிழக அரசுக்குப் பெருமளவில் வருவாய் ஈட்டித் தரும் சரக்கு (2)

இந்தக் குறிப்பைக் கண்டதும் தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் சரக்கென்று ‘மது’ என்று விடை சொல்லி விடுவார்கள் அல்லவா? நேரடிக் குறிப்புகள் இப்படித்தான் இருக்கும்.

  • பிறழ்மொழி (anagram)

 ‘உடைந்த’, ‘சிதறிய’, ‘குழம்பிய’, ‘கலைந்த’ என்பன போன்ற குறிப்புகள் வந்தால் Anagram Alert! என்று சுதாரித்துக் கொண்டு, அந்தக் குறிப்பில் உள்ள முக்கியமான சொல்லின் எழுத்துக்களை வேறு வேறு விதங்களில் வரிசைப் படுத்திப் பார்த்து விடை கண்டுபிடித்து விடலாம். எடுத்துக்காட்டாக, 

ஈழத்தில் சீன யாத்திரீகர்களுடன் வந்த யாகப்பானையின் இரண்டாம் கடைசி மறைய, கலைந்தது ராஜராஜனின் கோலம் (6)

இதில் திறவுச்சொல் யாகப்பானையின். இதில் இரண்டம் கடைசி (கடைசியில் இருந்து இரண்டாவது எழுத்தான ‘யி’) மறைய, யாகப்பானைன் என்று மாறுகிறது. இந்த எழுத்துக்களை மாற்றி வரிசைப் படுத்திப் பார்த்தால் ‘யானைப்பாகன்‘ வருகிறது. (பொன்னியின் செல்வன் கதையில் ராஜராஜன் யானைப்பாகன் வேடத்தில் வருவதாக ஒரு காட்சி இருக்கிறது).

  • இணைசொற்கள்

தின்பண்டம் வாங்கப் பதிப்பகத்தின் இயந்திரத்தைத் திருகு (3, 4)

இதில் தின்பண்டம் என்பது மையக் குறிப்பு. பதிப்பகத்தின் இயந்திரம் = அச்சு; திருகு = முறுக்கு. அச்சுமுறுக்கு (தின்பண்டம்).

  • சிலேடை

இரண்டு வகையான பொருள் தரும் சொற்கள் அல்லது சொல் தொடர்கள் இருக்கும். ஆனால் இரண்டிற்கும் ஒரே சொல் தான் விடையாக வரும்.

பேச்சு வழக்கில் ‘டபுள் மீனிங்’ என்று நாம் சொல்கிறோம் அல்லவா? 

ஜூன் 1 -ல் எதிர்பார்க்கப்படும் வாலிப சாரல்? (3,2 )

ஜூன் 1 -ல் எதிர்பார்க்கப்படுவது = பருவ மழை
வாலிப (பருவ) சாரல் (ஒரு வகை மழை) = பருவ மழை

இரட்டுற மொழிதல் என்ற இந்த வகையிலான இன்னொரு குறிப்பு:

இதற்கு மேல் சபை கூடினால் எல்லாம் தித்திப்பே (4)

இதற்கு மேல் (இனி) + சபை (அவை) = இனியவை
எல்லாம் தித்திப்பே = இனியவை

  • மறைந்திருக்கும் சொல்/சொற்கள்

நேச மாளிகை இருபுறமும் இடிகையில் நடுவில் நின்று தப்பிக்க முயற்சி செய் (3)

நேசமாளிகை – இதில் இருபுறமும் இடிய (இரண்டு பக்கங்களிலும் உள்ள எழுத்துக்களை நீக்க)
நேசமாளிகை = சமாளி

  • பிளவுற்ற சொற்கள்

ஏழு நாட்களுக்கு ஒருமுறை தாழ்வார சந்தைக் கடந்தால் பல பொருள் வாங்கி வரலாம் (2,3)

பல பொருள் வாங்கும் இடம் சந்தை என்று கொள்ளலாம். தாழ்வார சந்தை – இதில் வார சந்தை என்னும் சொற்கள் பிளவுற்று இருக்கின்றன. 

  • எழுத்துக்கள் நீக்கம்

வடமொழி நீக்கியதால் பொன்னியின் செல்வன் மந்திரவாதியும் சூரியனே (4)

பொன்னியின் செல்வன் மந்திரவாதி = ரவிதாஸன். இதில் வடமொழி எழுத்தான ‘ஸ’ என்பதை நீக்கிவிட்டால், 
ரவிதாஸன் = ரவிதான் (சூரியன் தான்)

வேதமோதும் சிறுவனிடம் வேதம் இன்றி சண்டையிடு (2)

வேதமோதும் என்பதில் வேதம் போனால்,
வேதமோதும் – வேதம் =  வேதமோதும் = மோது (சண்டையிடு)

  • பின்னிருந்து முன்னாக

ரத்தம் சொட்டாமல் இருக்க தலைகீழாய்ப் பிடித்துத் திருப்பு (3)

ரத்தம் = குருதி
‘திருப்பு’ என்கிற குறிப்பின் மூலம் பின்னிருந்து முன்னாக எழுத வேண்டும் என்று அறியலாம்.
குருதி (திருப்பினால்) = திருகு

எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் தெரிவது தெனாலிராமன் தான்!

தெனாலிராமன் ஒரு விகடகவி என்பதை அறிவோம். இடமிருந்து வலமோ வலமிருந்து இடமாகவோ எப்படி எழுதினாலும் விகடகவி விகடகவி தான்.

  • மேற்கண்ட உத்திகளைக் கலந்து தருவது 

இத்தகைய குறிப்புகளில் மேற்கண்ட வகைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையான உத்திகள் கையாளப் பட்டிருக்கும். சொற்பிளவு, பிறழ்மொழி, எழுத்து நீக்கம் என்று மூன்று வகையான உத்திகளும் அடங்கிய ஒரு குறிப்பு:

கட்சித் தாவலில் குழப்பம் வர, தாவியவரில் ஒருவர் சொத்தை வரிவிலக்கு போகக் கணக்கிட்டால் புல்லும் பூண்டும் வருகிறது (6)

‘குழப்பம்’ என்றதும் இது பிறழ்மொழி (anagram) என்று தெரிகிறது. ‘வர தாவியவரில்’ என்பது இங்கே திறவுச்சொற்கள். இதில் வரிவிலக்கு போக (‘வரி’ எழுத்துக்கள் நீக்கப்பட்டால்),

வர தாவியவரில் = தாவரவியல் (புல்லும் பூண்டும் என்பது பல்வேறு தாவரங்களைக் குறிக்கிறது)

இது தவிர Themed Crosswords என்ற குறிப்பிட்ட கருப்பொருளை மையமாக வைத்து அமைக்கப்படும் புதிர்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக,

பொன்னியின் செல்வன் குறுக்கெழுத்து

இதில் பொன்னியின் செல்வன் புதினத்தைப் படித்தவர்கள், அல்லது அதன் கதைக்களம் மற்றும் கதை மாந்தர் பற்றி அறிந்தவர்கள் மற்றவர்களை விட எளிதாக விடைகளைக் கண்டுபிடிக்கக் கூடும்.

சுடோகு (sudoku) போன்ற விளையாட்டுக்களும் மூளைக்கு வேலை தரலாம். ஆனால், குறுக்கெழுத்து போல வராது. ஒரு கடினமான குறுக்கெழுத்துக் குறிப்பை வைத்துக் கொண்டு மண்டையை உடைத்துக் கொண்டிருந்து விட்டு, பின்னர் அதற்கான விடை தெரிந்தவுடன் “ஆஹா , எங்க கிட்டயேவா?” என்று பெருமையுடன், அந்தப் புதிரை உருவாக்கியவரின் திறனையும் பாராcrossword-solving-artificial-intelligence-system-to-help-machines-learn-languageட்டும் அந்த அனுபவம் மன நிறைவையும் தன்னம்பிக்கையையும் தரும்.

சுடோகுவில் அது போல் ‘இந்த எடத்துல எப்புடி எட்டு போட்டேன் பாத்தியா?” என்று பெருமை பட்டுக்கொள்ள முடியாது.

எனவே, குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்கள் அறிவுத்திறனை வளர்க்கிறதோ இல்லையோ, நல்ல புதிர்கள் நிச்சயமாக உங்கள் மூளைக்கு வேலையுடன் சொல் வளத்தையும் சில (பல) சமயங்களில் புன்னகையையும் தரும்.

குறுக்கும் நெடுக்குமாக சிந்தித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.  கட்டங்களை நிரப்பும் கட்டதொரையாக இடமிருந்து வலம் வாருங்கள்.

 

 

இலக்யா குறுக்கெழுத்து 20


 

இலக்யா குறுக்கெழுத்து 19-க்கான விடைகளைக் காண இங்கே சொடுக்கவும்.

இனி இன்றைய குறுக்கெழுத்துப் புதிர்:

இடமிருந்து வலம்

1. வணிகப் பொருளுடன் ஒன்றைச் சேர்த்ததும் தங்க மழை பொழியும் பூ கிடைக்கிறது! (6)

4. கன்னிக்கு முதன்முதலாய் விரித்த வலை வருத்தத்தையே தந்தது (3)

5. உண்ணும் வேட்கை இருந்தும் உணவு இல்லாததால் தன்னிலை மறந்தது (2, 5)

6. பொறுப்பு மிக்க நிலை வேண்டி கொஞ்சம் பரிதவி (3)

8. திருப்பூருக்கு மிக அருகில் சென்றதும் பயணத்தின் திசையை மாற்ற வேண்டும் (4)

9. அக்னியைக் கண்டம் விட்டு இதைச் செய் (4, 2)

10. நீர் பகிர்வில் நீதியின் நீட்சி குறைந்த போதிலும் நம்மிடம் தான் வருகிறது ஆறு (2)

12. நினைவில் இருந்து அகற்று (2)

13. வான்வெளி எங்கும் குழப்பத்தில் விரவிக் கிடக்கிறது கோம்பள பிரதேசம் (4)

15. மரக்கிளைகளில் ஒருவகை பூச்சிகளால் சேர்த்து வைக்கப் பட்டுள்ள இனிப்புத் தொகுப்பு (2, 3)

16. தூமகேதுவின் குறும்புப் பகுதி? (2)

xwrd20

மேலிருந்து கீழ்

1. மாற்று சாதித் திருமணமானாலும் மணமக்களின் பெற்றோர் ஒன்றாக அமர்ந்து உண்ணலாம் (5)

2. தென்கிழக்கு ஆசியப் பகுதியில் முதல் வல்லொற்றை அகற்றிக் கொக்கரி தீய பற்பம் அடைந்த பிளவைச் சரிசெய்ய (3, 6)

3. சாலைக்குக் கொம்புகள் முளைத்ததால் கானகம் உருவானது (2)

4. சம்பளத்தில் முதல் தவணையைக் கட்டினால் நல்ல போர்வை கிடைக்கலாம் (5)

7. விரிவுரையில் சந்தேகம் தீர்க்க அதிவேகத் தொடர்வண்டியில் ஏற வேண்டியது தான் (3, 3)

10. வடமொழியை நீக்கி விட்டால் நமஸ்தே கூட எனக்கும் உங்களுக்கும் சொந்தமாகி விடும் (3)

11. வேலையை உரிய நேரத்தில் செய்யக் கூடிய ஆற்றல் [இயற்பியல்] (3)

14. சின்ன கோபாலனின் உயரம் கோபுரம் அளவில் பாதி (2)

 

விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

இலக்யா குறுக்கெழுத்து 19


இடமிருந்து வலம்

1. வீதி முகவரி தெளிவாய்ப் புரிய ஒளிகொண்டு எடுத்துச் சொல் (2,4)

5. ஒரே வகையான அணுக்களைக் கொண்ட தனிப்பொருள் (4)

6. பயணத்தில் நேர்ந்த குழப்பத்தால் கேட்ட பொருளைக் கொடுத்தால் தான் வீடு வந்து சேர முடியும் (4)

7. பெறும் செல்வத்தை எல்லாம் பெரும் செல்வமாய்ப் போட்டு வை (2)

9. உன் தவிப்பு நீங்கித் தெளிவு பெற முதலில் தேவை கொஞ்சம் ஒத்தாசை (3)

10. வெடியைப் போட்டதால் நல்ல லாபம் (3)

11. விரைவாய் விரைவாய்! அவசரம்! (5)

14. வண்டிப் புகையைத் திரும்பிப் பார்த்த சாமா சந்தேகத்தில் கேட்ட கேள்வி (2)

16. ஆட்டுக்கல்லில் அமர்ந்த குழந்தை? (3)

17. ‘ஈயடிச்சான் காப்பி’ அடி (3,2)

xwrd19

மேலிருந்து கீழ்
1. நாட்டுப்புறப் பாட்டு வகை (5)
2. சுதந்திரம் வேண்டும் என்றால் விட்டுக் கொடு சிரத்தை (4)
3. இல்லற இன்பங்களை வள்ளுவர் கண்ணோட்டத்தில் பாவேந்தர் விளக்கிய காவியம்(4,4)
4. கரகாட்டக்காரன் நாயகி ஆடக் குறைந்த ஆடம்பரம் இளஞ்சிவப்பு மலரானது (7)
8. அவசரப் படாமல் நிதானமாக யோசித்தால் விடை கிடைக்கலாம் (5)
9. ஆடை- தகர்த்திடு (2)
12. பேரிளம்பெண்? (3)
13. வடமொழி சூரியன் (2)
15. உரை ________ பத்தினியை … (சிலப்பதிகாரம்) (2)

விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

இலக்யா குறுக்கெழுத்து 18


இடமிருந்து வலம்

1. தலைவி திரும்ப வரப்போவதில்லை என்பதால் கட்சிக்கு இப்போதைக்கு இது தான் கதி (4)
3. இதை மக்களாட்சியின் திருவிழா என்கிறார்கள் (4)
4 & மேலிருந்து கீழ் 3. இருப்பிடம் கண்டுபிடி (2, 2)
5. விடுமுறை சூரியன்? (3)
7. அபிநந்தன் (3)
8. இனிய வாழ்வுக்கு அறுசுவையுடன் இந்த அணிகலனும் தேவை (5)
10. கொடுக்கும் தன்மை (2)
11 & மேலிருந்து கீழ் 10. எதிரிக்கு இணையாய் இருந்து சமாளி (2, 2)
12. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவிடும் வியாதி (3, 2)
13. நெகிழிப் பை இல்லாததால் மீண்டும் நமக்கு உதவுவது (3)
14. வாக்குகளை உறுதி செய்ய வேட்பாளர்கள் தரும் வாக்கு (5)

xwrd

மேலிருந்து கீழ்

1. குற்றப் புலனாய்வு செய்யத் தேவையான அறிவியல் (6)
2. ஆராய்ச்சியாளர் (4)
3. இடமிருந்து வலம் 4-ஐ பார்க்கவும்
4. மார்ச் மாதம் ஆங்கிலத்தில் இப்படி வேகமாகக் கடந்து விடுகிறது (4)
6. தின்பண்டம் வாங்கப் பதிப்பகத்தின் இயந்திரத்தைத் திருகு (3, 4)
9. மதுரை ஆற்றில் கரம் பதி (2)
11. இடமிருந்து வலம் 10-ஐ பார்க்கவும்

விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

கலைஞர் குறுக்கெழுத்து


 

பன்முகத் தன்மை கொண்டவரும், சமூக நீதி மலர்ந்திட உழைத்தவரும், இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் வித்தகருமான கலைஞர் கருணாநிதி அவர்களை மையமாக வைத்து இந்தக் குறுக்கெழுத்தை அமைத்திருக்கிறேன். ஒரு 13 x 13 கருப்பு-வெள்ளை கட்டத்திற்குள் அவரது இயல்புகளையும் சிறப்புகளையும் அடக்குவது என்பது இயலாத காரியம். அவரது உடன்பிறப்புகள் மட்டுமன்றி அவரைப் பற்றிய பொது அறிவு கொண்டவர்கள், மற்றும் குறுக்கெழுத்து ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் முயற்சிக்கும் வண்ணம் இந்தப் புதிரை உருவாக்க முயன்றுள்ளேன். பிழைகள் இருப்பின் தெரிவிக்கவும். உங்கள் விடைகளை வழக்கம் போல் vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.

இடமிருந்து வலம்:

1. கோட்டூர்புரத்தில் ஒரு புத்தகக் கோட்டை (3, 4)

2. ‘தென்றலைத் தீண்டியதில்லை நான், தீயைத் தாண்டியிருக்கிறேன்’ – வசனம் இடம்பெற்ற படம் (5)

5. மூன்றாம் பாலினத்தவருக்கு நல வாரியம் அமைத்த கலைஞர், அவர்களுக்கு வழங்கிய பெயர் (7)

6. குண்டலகேசியைத் தழுவி கலைஞர் எழுதி எம். ஜி. ஆர் நடித்த திரைப்படப் பெயரில் இரண்டாம் பாதி (3)

8. சமூக நீதி வேண்டுமாயின் அனைவரும் ஆகலாம் ________ (6)

10. தன் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்துக் கலைஞர் எழுதியது (5, 2)

12. மாநில முதல்வர்களுக்கு இதை ஏற்றிட உரிமை உண்டெனப் போராடி வென்றார் கலைஞர் (6)

14. ‘மூன்றாம் தர ஆட்சி’ என்ற விமர்சனத்துக்குப் பதில் அளிக்கையில் ‘இல்லை இல்லை, இது __________ தர ஆட்சி’ என்று பெருமையுடன் சொன்னார் (4)

15. விவசாயிகளுக்குக் கலைஞர் கொடுத்த ஒரு இன்ப அதிர்ச்சி (4, 5)

kalaignar-xwrd.jpg

மேலிருந்து கீழ்:

1. இலங்கையில் இம்சை செய்த இந்தச் சேனையை வரவேற்க மறுத்தார் (6)

3. கலைஞரின் பூமழை போன்ற சீரான சொற்பொழிவை இப்படியும் சொல்லலாம் (4)

4. நாத்திகர் ஓடச் செய்த தேர் கொண்ட ஊர் (5)

7. உடல் ஊனமுற்றோர்க்கு இவரளித்த மாற்றுப் பெயர் (8)

8. இதயம் இரவலாகத் தந்தவர் (3)

9. அரசியல் தண்டவாளத்தில் கலைஞரின் ரயிலைத் துவக்கிய டால்மியாபுரம் (6)

11. கிரிக்கெட் பிரியர் ஹேட்ரிக் அடித்த தொகுதி (6)

13. அலைகடலென பொதுக்கூட்டம் (3)

கீழிருந்து மேல்:

16. இந்தச் சனி மறைந்தால் தான் சமத்துவ ஞாயிறு பிறக்கும் (2)

விடைகளும் விளக்கங்களும் விரைவில்…

38630410_10214340766926038_3993668150410346496_n

குறுக்கெழுத்து 17 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்


இன்றைய தலைமுறையினர் நிறைய படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கணிதம், அறிவியல் தவிர ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற ‘முக்கியமான’ பாடங்களையும் படிப்பதால் தமிழ் போன்ற ‘முக்கியமில்லாத’ பாடங்களைக் கண்டு கொள்வதில்லை. அவர்களைக் குறை சொல்லி என்ன பயன்? ஒரு 5 முதல் 10 நிமிடங்கள் அவர்களின் பொன்னான நேரத்தைக் கடன் வாங்கி அதில் சில தமிழ் விளையாட்டுக்களை விளையாடச் சொல்லலாம். ஒரு வேளை அதன் மூலம் சிறிது தமிழ் ஆர்வம் அவர்களுக்கு வரலாம். அதற்கான் சிறு முயற்சி தான் இது. சிறிய புதிர், சில எளிய சொற்கள், கொஞ்சம் சிலேடைகள் என்று என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன்.  கட்டங்களுக்குள் தமிழில் தட்டச்சு செய்யலாம். சரியான எழுத்தை உள்ளிட்டால் அந்த கட்டம் பச்சை நிறமாகும். இது வேலை செய்யாவிட்டால் வழக்கம் போல் ப்ரிண்ட் செய்து கட்டங்களை நிரப்பவும்.

இடமிருந்து வலம்:

1. கதிரவனும் தேசத் தந்தையும் சேர்ந்த பூ (6)

3. ஆடி மாதம் 18-ஆம் நாள் நடனமாடிக் கொண்டே வீட்டைச் சுத்தம் செய் (7)

5. மரங்கள் நட்டு நீர் ஊற்றியதால் கிடைத்த பச்சை தன்மை (3)

7. வெயில் விரும்பும் பழம் – திருடி (3)

மேலிருந்து கீழ்:

2. அகர முதல’ என்று துவங்கும் நூல் (6)

3. துவக்கம் (5)

4. பெரிய இங்க் பாட்டில் வாங்கிய கர்வம் (3)

6. ப்ரவுன் நிற உடல், கருப்பு நிறத் தலை, வால் நுனியில் சிறிது இளம் வெள்ளை நிறம். என்ன பறவை இது?

7. பழம் –  _____ இருப்பக் காய் கவர்ந்தற்று (2)

 

விடைகளையும் கருத்துக்களையும் vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.

 

தமிழ் குறுக்கெழுத்து 15 -தேர்தல்


சட்டப் பேரவைக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நம் கடமையைச் செய்யாமல் இருந்தால் எப்படி? குறுக்கும் நெடுக்குமாக யோசித்து சரியான விடைகளைத் தேர்ந்தெடுங்கள். தேர்தல் நேரத்தில் நாம் அடிக்கடி கேட்டிடும் சொற்களே இங்கே பெரும்பாலான விடைகளாக வந்துள்ளன.

இந்தக் குறுக்கெழுத்து ஐந்துக்கு எத்தனை மதிப்பெண் பெறும் என்பதை மேலே உள்ள ஐந்து நட்சத்திர சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்க மறந்துவிடாதீர்கள்.

இடமிருந்து வலம்:

1. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…. இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்ற பட்டியல் (4, 4)

3. திரு. கருணாநிதி அவர்களின் அடைமொழி (4)

7. உன் வாக்கினைச் செலுத்தும் உரிமை ___ (3)

8. பல கட்சிகளின் ஒருங்கிணைவு (4)

xwrd15

தமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல்

9. ஓட்டு போடுவதால் ஏற்படும் குதூகலம்? (6)

11. பாராளுமன்றம் சுருங்கியதால் எஞ்சியது வாற்கோதுமை மட்டுமே (3)

12. தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் படிவம் (3,2)

15. கட்சி சார்பாகப் போட்டியிட இந்த மண்டைச்சாயம் அனுமதிக்க வேண்டும் (3)

16. வெற்றி பெறத் தேவையான எண்ணிக்கை (6)

17. தனக்கென இருக்கும் நிச்சய ஓட்டுக்கள் (3,3)

18. போட்டியிடுபவரின் அடையாளம் (4)

மேலிருந்து கீழ்:

1. தேர்தல் நடத்தும் இ.ஆ.ப. அதிகாரி (4,4)

2. வாக்களித்த அடையாளம் (3,1)

3. மக்கள் கருத்தறிந்து தரப்பட்ட நிகழ்தகவு (9)

4. அனல் பறக்கும் மேடைப்பேச்சு கேட்கக் கூடும் பெருந்திரள் (7)

5. அதிக வாக்குகள் பெற்றிருப்பவரின் நிலை (4)

6. தமிழ் பிரச்சாரம் (5)

7. தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு (5)

10 & 13. சத்தம் கூட்டி, பேச்சாளரின் தாக்கத்தை அதிகரிக்கும் கருவி (2,4)

12. போட்டியாளர் (5)

14. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பது (4)

15. (அ.தி.மு.க. நீங்கலாக) கட்சி முதல்வரைத் தொண்டர்கள் இப்படி அழைக்கிறார்கள் (3)

விடைகள், விமர்சனங்கள் தேர்தலுக்கு முன்பாக வந்து சேர வேண்டிய மின்னஞ்சல் vijayshankar.twwi@gmail.com

மாற்றாக, கீழுள்ள பின்னூட்டம் (comments) வழியாகவும் விடைகளை அனுப்பலாம்.

சோதனை முறையில் கீழுள்ள கட்டங்களில் தமிழ் தட்டச்சு செய்து பார்த்து விடைகளை சரிபார்க்க முயற்சிக்கலாமே! விதிப்படி சரியான எழுத்து உள்ள கட்டம் பச்சை நிறத்திலும் தவறானது இளஞ்சிவப்பு நிறத்திலும் மாற வேண்டும்.

தமிழ் குறுக்கெழுத்து 14


பொன்னியின் செல்வன் படிக்காதவர்களும் பிடிக்காதவர்களும் (யாராவது இருந்தால்) புதிர் 13-ஐ விரும்பியிருக்க மாட்டார்கள். அதே வேளை தமிழ் ‘தி இந்து’வில் இந்த தளத்தைப் பற்றிய பதிவு ‘நெட்டெழுத்து’ பகுதியில் வந்தமையால் பல புதிய நண்பர்கள் வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது (அந்த பதிவை இங்கே படிக்கலாம்). மீண்டும் ஒரு ‘பொதுவான’ குறுக்கெழுத்துப் புதிர் இதோ. சில நேரடி குறிப்புகள், சில பொது அறிவு குறிப்புகள், சில பிறழ்மொழிகள்… தமிழில் கலக்குங்கள்.

விடைகளையும் விமர்சனங்களையும் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் அனுப்பவும். vijayshankar.twwi@gmail.com

இடமிருந்து வலம்

1. சேர சோழ பாண்டியர் பற்றி 2700 பாடல்கள் – அனைத்தும் கிடைக்கவில்லை, ஆனால் தொகை மாறவில்லை (7)

4. பேச்சு வாக்கில் காய்ந்து முற்றுப் போலியான மருதாணி  (4)

6. வடமொழி மேன்மையைப் பறித்த போதிலும் பெயரில் இவள் நாயகி (2)

8. இனி என்ன செய்வது என்பதை ஒரு மார்க்கமாகக் கேள் (2,3)

10. என்ன தைரியம் – எல்லோரும் பார்த்திருக்கையில் ஆடை மீது கை வைக்க (5)

11. மு. கருணாநிதி துவக்கி வைத்த இன்ப வெளிப்பாடு (7)

14. சூரிய உதயம் காட்டும் பருவப் பெண்? (3)

குறுக்கெழுத்து 14

குறுக்கெழுத்து 14

15. கதை சொல்லி ஆடும் நடனம் (4)

17. ஶ்ரீரங்கம் ரங்கராஜன் (3)

19. தேனீக்கள் தந்ததல்லடீ, இது வேறு (3)

20. தீய்ந்தாலும் சுவையான படிவு (4)

22. இறுதியாகவே நடந்த குழப்பத்தில் முடி வேக வா (5)

24. வானிலிருந்து அப்பம் வேண்டி எழுதிய கடிதம் (6)

25. இந்திய ஏவுகணை மனிதருக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை தரலாம் (6)

மேலிருந்து கீழ்

1. முழுக்க முழுக்க போதையில் எரிந்ததால் ளகர மயக்கத்தில் அணைந்த்த தீபம் (2,2,4)

2. மதுக்கடைகளை மூடினாலும் தொந்தரவு பல (3,2 அல்லது 5)

3. செய்து பாராளுமன்றத்தின் அழகைக் கெடுக்கும் அமளி (3)

4. கருஞ்சாயக் கண்? (3)

5. பாரதி அழைத்த குட்டிப் பறவையே (6,3)

6. இஞ்சி இடுப்பழகன் (6)

11. முதுமையின் இருப்பிடம், சுருக்கெழுத்தில் (4)

12. விருது (3)

13. சுப்பு ரத்தின தாசன் (3)

16. அண்மையில் ட்விட்டரில் தமிழர் கீச்சி அசத்திய வாழ்த்து (3,3)

18. பாரதி (4)

19. மற்றதைப் படிக்கும் அதே வாரம் இந்த சைவப் பதிகங்களையும் படிக்க முயன்றேன் (4)

22. சேலைத் தலைப்புக்கும் முன்னால் வந்து (3)

23. யானை (3)

http://ta.wikipedia.org/wiki/தஞ்சைப்_பிரகதீசுவரர்_கோயில்#/media/File:Sadhaya_Vizha,_Thanjai_periya_kovil.jpg

தமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன்


தமிழில் ஈடு இணையற்ற வரலாற்றுப் புதினம் அமரர் கல்கி செதுக்கிய பொன்னியின் செல்வன். வரலாற்றுத் தகவல்கள், மறக்க முடியாத கதை மாந்தர், திகில் திருப்பங்கள் என்று ஒரு நெடுந்தொடர் கதைக்குத் தேவையான எல்லா இயல்புகளும் அமைந்த இந்தக் காவியத்தைப் படித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பது என் கருத்து. Themed crossword செய்ய வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. பொன்னியின் செல்வனில் இல்லாத புதிர்களா? கதையைப் படித்தவர்களுக்கு ஒருசில சுவாரசியமான நிகழ்வுகளை நினைவுகூர ஒரு வாய்ப்பு. இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள் ஆழ்வார்க்கடியான் போல கூகுள் முழுவதும் ஒற்றறிந்து விடைகளைக் கண்டுபிடிக்கலாம். சோழர்களின் வேகத்துடன் விரைவாக விடைகளை நிரப்புங்கள். விடைகளைக் கண்டுபிடித்து விட்டு ஊமையரசி போல் இருந்து விடாமல் வந்தியத்தேவனிடம் ஒரு மின்னோலையை vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு அல்லது இந்தப் புதிரின் கீழே பின்னூட்டத்தில் கொடுத்தனுப்புங்கள்.

இடமிருந்து வலம்

1. கட்டையுமாய் குட்டையுமாய் வைரம் பாய்ந்த திருமேனியும் கையில் குண்டாந்தடியும் கொண்டவன்  (9)

5. குந்தவையும் வந்தியத்தேவனும் முதன்முறை சந்தித்த ஊர் (4)

7. நம்பியின் இயற்பெயர் (4)

8. கலங்கரை விளக்கத்தில் தீபமேற்றுபவர் (8)

10. சம்புவரையர் மாளிகையில் வந்தியத்தேவன் கண்ட ஆடல்-பாடல் (7)

11. வந்தியத்தேவனைப் பலமுறை காப்பாற்றிய, சிலமுறை சிக்க வைத்த பழுவூர் முத்திரை (2)

13. குந்தவை மற்றும் வானதியைக் காப்பாற்ற இதன் மீது வந்தியத்தேவன் வெட்டியாக வேலெறிய வேண்டியதாயிற்று (3)

14. வந்தியத்தேவனை ஈழத்துக்கு அழைத்துச் செல்லப் பூங்குழலி செய்த எம்.ஜி.ஆர். வேலை (5)

17. (வலமிருந்து இடம்) சுரங்கப் பாதையில் சென்ற வந்தியத்தேவன் கண்டுபிடித்த செல்வக் களஞ்சியம் திரும்பியிருக்கிறது (4)

18. திருக்கோவலூர் மலையமானும் ஆதித்த கரிகாலனும் மனம்விட்டுப் பேசிப் பிரிந்து சென்ற அழகிய இடம் (8)

xwd13.001

மேலிருந்து கீழ்

1. பொன்னியின் செல்வன் காவியம் தொடங்கிடும் நன்னாள் (7)

2. அருள்மொழிவர்மனைத் தன் வசப்படுத்திய கொடும்பாளூர் இளவரசியின் சுய நினைவின்மை (3,5)

3. ஈழத்தில் சீன யாத்திரீகர்களுடன் வந்த யாகப்பானையின் இரண்டாம் கடைசி மறைய, கலைந்தது ராஜராஜனின் கோலம் (6)

4. பழுவூர் இளையராணி குறுகிட வருவதோ மகாதேவரின் வாகனம் (3)

6.   பல்லக்கில் பவனி வரும் பேரழகி (4)

9.   வந்தியத்தேவனுக்கு நிகழவிருக்கும் ஆபத்தை மணிமேகலை முன்கூட்டியே உணர்ந்த விதம் (3)

10. ராஜராஜனின் தமக்கையை இங்கே அமர வை (4)

11. தலைநகரம் (4)

12. வந்தியத்தேவன் பூங்குழலியைச் சந்திக்கும் இடம் (5)

15. பகைவர்க்கு எமனாம் பொன்னியின் செல்வன் (3)

16. வந்தியத்தேவனின் விலாவில் பாய்ந்த ஆயுதம் (3)

12-ஆம் வகுப்பு இயற்பியல் குறுக்கெழுத்து


12-ஆம் வகுப்பு இயற்பியல் என்றதும் அன்பர்கள் தெறித்து ஓட வேண்டாம். இளம் மாணவர்களை ஊக்குவிக்க எத்தனையோ வழி இருக்கிறது. அவர்களுக்கு குறுக்கெழுத்து ஆர்வம் கொண்டு வரும் அதே வேளையில் ‘படிக்காம என்னடா கட்டம் கட்டி விளையாடுற?’ என்று பெற்றோர் கேட்டால் ‘இயற்பியல் போட்டி தான் அம்மா. இதெல்லாம் பாடத்தில் இருப்பது தான்’ என்று காரணம் சொல்ல ஒரு வாய்ப்பு. விடைகள் மற்றும் விமர்சனங்கள் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் (vijayshankar.twwi@gmail.com) வரட்டும். நான் இதுவரை அமைத்ததிலேயே மோசமான குறுக்கெழுத்து இதுவாகத் தான் இருக்கும். அதனால் என்ன? ஓரிரு மாணவர்கள் முயற்சித்தால் அதுவே ஒரு வெற்றி தானே.

இடமிருந்து வலம்:

xwrd121. ஒளி எடுத்துக் கொண்ட selfie? (6)

5. சிறு பொடி தான். ஆனால் கனமும் நிறையும் உண்டு. (3)

6. பக்தனின் வாயில் உலோக ஊசி குத்தி எடுத்த அளவு  (3)

8. நிறை (3)

9 & மேலிருந்து கீழ் 5. பிளமிங்க் மூன்று விரல்களால் விளக்கிய மின்னியற்றின் தலையெழுத்து (4,3,2)

11. தொலைதொடர்பில் துல்லியம் பெற அலைவடிவம் பெற்ற குண மாற்றம் (6)

மேலிருந்து கீழ்:

2. இந்த இயற்பியல் பயணத்தில் வெறும் வேகம் மட்டும் அல்ல, இலக்கை அடையும் பாதையும் முக்கியம் (5)

3. ஒடிந்த வில்லுக்கும் ஒளி சிதறுகையில் அலைநீள மாற்றத்துக்கும் காரணம் (3, 3)

4. (இடமிருந்து வலம் 9-ஐ பார்க்கவும்)

6 & 9. ஒன்றன் பின் ஒன்றாய் வரும் ஏற்ற இறக்கங்கள் – அதிர்வெண் எல்லைகளுக்குள் அகப்பட்டன (2,3)

7. மின்னூட்டத்தை சேமித்து வைத்திருக்கும் கருவி (3)

9. (மேலிருந்து கீழ் 6-ஐ பார்க்கவும்)

10. மின்தடையால் வந்த பிரணவ ஒலி (2)