கடலோடு… இன்று ரசித்த கவிதை


களித்துப் போகிறாள் என் செல்லம்

தீரா அலைகளின் ஓயா ஓசையினால்

தீண்டித் தீண்டிச் செல்லும்

அலைக் கரங்களால் மகிழ்ந்து போகிறாள்

குளிர்ந்து தவழ்ந்து நடுங்கி …

கடலோடு…

நண்பர் லோகேஷ் எழுதிய இந்தக் கவிதை உங்கள் மனதையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.