பங்குபெற்ற அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும். சரியான விடைகளை அனுப்பியவர்கள் ராமராவ் மற்றும் Varghesh Vergin. இரண்டாமவர் அனுப்பிய விடைகளையே இங்கே தந்திருக்கிறேன்.
Tag Archives: crossword
தமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்
தமிழில் வரலாற்றுப் புதினங்கள் பல இருக்கலாம். அவற்றுள் ஒரு புதினமே வரலாறு படைத்திருக்கிறது என்றால் அது அமரர் கல்கி வடித்த பொன்னியின் செல்வன் மட்டுமே. விற்பனையில் ஆகட்டும், வாசகர் வரவேற்பில் ஆகட்டும், எழுத்து நடை, கதைக்களம், என்று எல்லாவற்றிலுமே பொன்னியின் செல்வன் தான் சூப்பர் ஸ்டார். 1950-களில் வெளிவந்த இந்த நெடுந்தொடர் இன்றும் (2019) பேசப்படுவதும் போற்றப்படுவதும் இதற்கு சாட்சி. கதைமாந்தர் ஒவ்வொருவரும் சாகா வரம் பெற்று விட்டனர். புதிர்கள் நிறைந்த பொன்னியின் செல்வனை வைத்து ஒரு குறுக்கெழுத்துப் புதிர் செய்தால் ‘நேயர்களுக்கு’ பிடிக்காமல் போகுமா என்ன?
ஏற்கனவே நான் அமைத்திருந்த ஒரு புதிரை இங்கே காணலாம்.
சென்ற முறையைவிட சற்று எளிதாகவே அமைத்திருக்கிறேன். இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள் ஆழ்வார்க்கடியான் போல நண்பர்களிடமும் கூகுளிடமும் ஒட்டுக்கேட்டு விடைகளைக் கண்டுபிடிக்கலாம். விடைகளைக் கண்டுபிடித்து விட்டு ஊமையரசி போல் இருந்து விடாமல் வந்தியத்தேவனிடம் ஒரு மின்னோலையை vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு அல்லது இந்தப் புதிரின் கீழே பின்னூட்டத்தில் கொடுத்தனுப்புங்கள்.
உள் நிரப்பும் கட்டங்களைச் சோதனை முறையில் சேர்த்திருக்கிறேன். சரியான எழுத்தை உள்ளிட்டால் கட்டம் பச்சை நிறத்திற்கு மாறும். தவறான உள்ளீடு கட்டத்தைச் சிவப்பாக்கி விடும். உள்ளிட்ட எழுத்தை அழிப்பதற்கு கட்டத்தில் இரண்டு முறை சொடுக்கி பின்பு delete செய்யவும்.
‘இதெல்லாம் ஆகற வேலையா?’ என்பவர்கள் கீழே வழக்கம் போன்ற கட்டங்களைப் பார்த்தோ பிரதி எடுத்தோ விடைகள் அளிக்கலாம்.
இடமிருந்து வலம்
1. திருமேனியில் 64 போர்க் காயங்கள் கொண்டவர் (8)
3. வந்தியத்தேவன் மனதில் சோழ இளவரசியை அமரச் செய் (4)
5. அருள்மொழியும் தியாகமும், ஆழ்வார்க்கடியானும் ஆபத்தும், வந்தியத்தேவனும் விளையாட்டுத் துணிச்சலும், குந்தவையும் வானதியும், அதேபோல் வானதியும் _________ (6)
7. வந்தியத்தேவனின் முகத்துக்குப் பூங்குழலியின் உவமை; ரவிதாசனின் ரகசிய ஒலி (3)
8. தனது பாட்டனாரின் தந்தை நினைவாகக் குந்தவை நடத்தி வந்த மருத்துவமனை (6)
9. ஒரு வகையில் செம்பியன் மாதேவி அருள்மொழிவர்மனுக்கு இந்த உறவுமுறை (3)
12. வந்தியத்தேவனுக்கு கிடைத்த ‘மாய மோதிரத்தில்’ இருந்த முத்திரை (2, 5)
17. சக்கரவர்த்தியைச் சந்தித்த வந்தியத்தேவன் அவருக்கும் ராஜ்ஜியத்துக்கும் ஆபத்து என்பதை இவ்வாறு கத்தினான் (4)
18. பிணி நீக்குபவர் மைந்தன் (5)
20. பழுவேட்டரையரின் இயற்பெயர் (4, 4)
21. சிவனைப் பற்றி திருமலை அவதூறாகப் பேசியதால் இவர் அடைந்த கோபம் தணிய ஆங்கில வெண்ணெய் தான் சரி (4)
22. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் இங்கே தான் எல்லாம் தொடங்குகிறது, ஆடித் திருநாளன்று (2, 4, 2)
மேலிருந்து கீழ்
2. மேலே புலி, அடியில் கிரீடம். கிரீடத்துக்கு அடியில் ஒரு பலிபீடம், கழுத்து அறுபட்ட ஒரு தலை, ஒரு பெரிய பலிக் கத்தி. இவற்றை செந்நிறத்திலான தங்கள் கொடியில் கொண்டவர்கள் இவர்கள் (8)
3. குந்தவையின் ஆஸ்தான சோதிடர் இருந்த ஊர் (4)
4. கடும் காவலையும் மீறி ஆதித்தனின் ஓலையை அரசரிடம் தர வந்தியத்தேவன் துணிந்து நுழைந்த இடம் (3, 3)
6. வந்தியத்தேவன் வாளை விழுங்கி, பின்னர் அவனை அசடுவழியச் செய்த போலி விலங்கு (3)
10. திகிலையும் வியப்பையும் தந்து வந்தியத்தேவன்-கந்தமாறன் நட்பை அதல பாதாளத்துக்குத் தள்ளிய இடம் (4)
11. அருள்மொழிவர்மன் இலங்கையில் ஏற்ற மாறுவேடம் (6)
13. என்னதான் மாமிசம் உண்ணாதவனாக இருந்தாலும் ஆழ்வார்க்கடியானுக்கு இது மட்டும் பிடிப்பதில்லை (3)
14. கொள்ளிடம் அருகே அரச மரத்தடியில் மீன் சமிக்ஜை செய்து காட்டியவன் (7)
15. ஆழ்வார்க்கடியான் என்கிற திருமலை மீது நம்பிக்கை வைத்து (3)
16. காலாமுகர்களின் முன்னோர்கள் (7)
19. நோயாளியாகவும் ஒருவித கைதியாகவும் படுத்திருக்கும் அழகிய ____ சோழர் (4)
கீழிருந்து மேல்
7. திருமலையப்பன் இவருக்கு அடியான் (4)
இலக்யா குறுக்கெழுத்து 25
–
விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.
இலக்யா குறுக்கெழுத்து 24-க்கான விடைகள் இங்கே.
உள் நிரப்பும் கட்டங்களைச் சோதனை முறையில் சேர்த்திருக்கிறேன். சரியான எழுத்தை உள்ளிட்டால் கட்டம் பச்சை நிறத்திற்கு மாறும். தவறான உள்ளீடு கட்டத்தைச் சிவப்பாக்கி விடும். இதில் எண்களைச் சேர்க்கும் அளவுக்கு நான் இன்னும் தேறாததால் குறிப்பு உள்ள கட்டங்களைச் சொடுக்கினால் குறிப்புகள் தெரியும்படி செய்துள்ளேன். உள்ளிட்ட எழுத்தை அழிப்பதற்கு கட்டத்தில் இரண்டு முறை சொடுக்கி பின்பு delete செய்யவும்.
‘இதெல்லாம் ஆகற வேலையா?’ என்பவர்கள் கீழே வழக்கம் போன்ற கட்டங்களைப் பார்த்தோ பிரதி எடுத்தோ விடைகள் அளிக்கலாம். புதிய கட்டம் பற்றி உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தவும்.
–
இடமிருந்து வலம்
1. காததை கல் கொண்டு மாற்றி அன்பு காவியமாய்ச் சொல் (3, 2)
6. வைட்டமின்-ஏ அளித்தால் அந்திப் பொழுதின் இருள் நீங்கலாம் (5)
7. நீங்களும் நானும் பார்க்க (2,2)
11. சிறுவயதுப் பட்டாம்பூச்சி உதறித் தள்ளிய போர்வை (4)
13. கோவில் வம்சத்திற்குள் இப்படி ஒரு மரம் (4)
16. தற்பெருமையால் கெட்டுப் போனாலும் பாதுகாப்புடன் வீசுகிறது காற்று (5)
17. ஒரு வீசம் கைமா கிளறிடு அன்னையே! (1, 4)
வலமிருந்து இடம்
10. பழங்காலத் தமிழ் முகம் (4)
–
மேலிருந்து கீழ்
2. கலங்கலாகத் தனது சாயம் ஆன போதும் பண்புடன் பழகும் குணம் (5)
3. ஒன்பது மாதம் ஓடிப் போனது தெரியாத கணவர் தம் மாதை இப்படியா குழப்புவது? (1, 3)
4. குடும்ப நலம் பற்றிய அரசாங்கத்தின் கோணம் (5)
5. நாட்டுப் பண் புதிய இசையில் ஒலித்தாலும் அதற்குள் மூழ்கிடும் நாட்டுப் பற்றாளரின் தன்மை (3)
7. முழுநீளக் கதை சொல்லும் கருநீலப் பழம் (3)
8. தண்ணீர் குடத்தில் கல் போடுவதற்கா கம்மென்று இருந்தது இந்தக் காக்கை? (3)
9. முதலுதவிக்கா தேடி அலையாதே என்கிறாய்? (5)
12. பணம் பல பெட்டிகளில் இருப்பது உறுதி (2,3)
14. வலம் வருகையில் நெருக்கமானவர் (3, 1)
15. மடை மாற்றிய மேதகு முதல்வருக்கு இரண்டு கொம்பு மட்டும் தான் இல்லை (3)
–
இலக்யா குறுக்கெழுத்து 24
–
விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.
இலக்யா குறுக்கெழுத்து 23-க்கான விடைகள் இங்கே.
உள் நிரப்பும் கட்டங்களைச் சோதனை முறையில் சேர்த்திருக்கிறேன். சரியான எழுத்தை உள்ளிட்டால் கட்டம் பச்சை நிறத்திற்கு மாறும். தவறான உள்ளீடு கட்டத்தைச் சிவப்பாக்கி விடும். இதில் எண்களைச் சேர்க்கும் அளவுக்கு நான் இன்னும் தேறாததால் குறிப்பு உள்ள கட்டங்களைச் சொடுக்கினால் குறிப்புகள் தெரியும்படி செய்துள்ளேன். உள்ளிட்ட எழுத்தை அழிப்பதற்கு கட்டத்தில் இரண்டு முறை சொடுக்கி பின்பு delete செய்யவும்.
‘இதெல்லாம் ஆகற வேலையா?’ என்பவர்கள் கீழே வழக்கம் போன்ற கட்டங்களைப் பார்த்தோ பிரதி எடுத்தோ விடைகள் அளிக்கலாம். புதிய கட்டம் பற்றி உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தவும்.
–
இடமிருந்து வலம்
2. தைரியநாதசாமியிடம் போய் அரைகுறையாக மல்லுக்கட்டுவது தான் உங்கள் துணிவா? (3)
5. திரு. மதிமாறன் பாதி வரைக்கும் முழு பெண்ணாகத் தான் இருந்தார் (4)
6. நண்பா! சனம் பிழைக்க நீர் பாய்ச்சினால் தானே பயிர் விளையும்! (4)
7. வந்தியத்தேவனின் ஆருயிர் நண்பன் _____ மாறன் (3)
8. நெடுநல்வாடையை நாள்காட்டியில் தேடினால் நீண்ட காலம் தேவைப்படும் (4)
10. மரமாய் நின்று பரவு (2,2)
11. பல்குத்த உதவும் சிறுபொருள் (4)
13. போகி தொடங்கி, பொங்கலும் முடிந்தாயிற்று. காலம் எவ்வளவு விரைவாகச் செல்கிறது! (4)
17. _____ முத்தல்லவோ! (4)
18. சுற்றுச்சூழல் சீர் கெட உள்ளுக்குள் இன்னுமா சடையணிந்து வர வேண்டும்? (4)
20. பணமே, அவர் செய்த உதவிக்குக் கைம்மாறாக நீயே இங்கிருந்து அங்கு செல் (1,2)
வலமிருந்து இடம்
16. ராமனின் தோழன் (3)
–
மேலிருந்து கீழ்
1. காய்ந்த மீனுக்காக உட்பொருள் முதற்கொண்டு ஏங்கு (4)
2. ஒரு தெருவில் ஓடும் மதுபானம் பல தெருக்களை உருவாக்கி விட்டது (4)
3. பெரும் பாவம் செய்தவளே குழப்பத்தில் பாதமாகி விட்டாள் (4)
4. குற்றால அருவிகளில் எல்லாவற்றினும் உயரத்தில் உள்ள அருவி (4)
8. சுருங்கச் சொன்னால் நீண்டது (3)
9. குருதிக் குழாய் (3)
12. புகை பிடிப்பதற்குள் என்ன ஒரு மென்சிரிப்பு (4)
13. போ, குமாரு… கடைசி எழுத்து தப்பு! (4)
கீழிருந்து மேல்
14. சின்னஞ்சிறு கிளிப்பிள்ளை (3)
15. வரவு செலவில் ஒரு பகுதி முகம் துடைக்கவே போய் விடுகிறது (3)
19. உள்ளம் உருகாத் திருவாளர்கள் மத்தியில் நேரம் வரும் வரை பொறுமையுடன் இரு (4)
21. நடமாடும் திறனை அடைய நிகழ வேண்டியது (2,2)
–
இலக்யா குறுக்கெழுத்து 23
விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.
புதிர் 22-க்கான விடைகள் இங்கே.
இடமிருந்து வலம்
5. விறகு விற்கும் கடைக்குள் எட்டிப் பார்த்தால் வேறென்ன கிடைக்கும்? (3)
6. இதயத்தின் தசைகளுக்கு மசை போட்டால் உயரத்தை அடையலாம் (4)
7. சிம்புவின் நடனத்தில் லயித்த கண்ணகி காலணி (4)
8. விசை செலுத்து, வேறுருவம் கொள். இதுவே கட்டளை! (6)
9. குதிரை திக்குமுக்காடுகிறதே என்று கவலை கொள் (4)
10. பசுமை தாங்கிடும் காடுகளுக்கு உள்ளே இருக்கிறாள் நம் மாசுக்களின் நஞ்சைக் குறைக்கும் பொறுப்பாளி (5)
மேலிருந்து கீழ்
1. அதுக்குள் கமகம வாசனை வர உள்ளமது பெயரளவில் இசுலாத்தை நாடுகிறது (4)
2. சோ ராமசாமிக்கு ஆங்கிலப் பசை தந்த வாட்டம் (3)
3. இறுதியாக ஒருமுறை சிதறிக் கிடக்கும் கடை சிறிது தூர இடைவெளியில் ஒழுங்குபெற ஒருவனை அனுப்புகிறேன் (3,2)
4. பச்சோந்திகளின் சிறப்பம்சம் (3,3,3)
8. பயமறியாத் திராவிடர் உடைமை (4)
9. அந்த பகீர் தகவலைக் கொஞ்சம் நாசூக்காக வலைதள நண்பர்களுக்குச் சொல் (3)
இலக்யா குறுக்கெழுத்து 22
விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.
புதிர் 21-க்கான விடைகள் இங்கே.
இடமிருந்து வலம்
1. மருதுவின் பிணி நீக்கியவர் (6)
4. நாட்டின் வருவாயில் நாட்டம் கொண்டு தேவையானதை எடுத்து வைத்துக் கொள் (3)
5. சுதந்திரம் பெறப் போராடியதில் தம் திசு போன பின்னும் கைதி தசை கொண்டு சாமர்த்தியமாக காட்டிய சமிக்ஞை (4, 2)
8. ஒளி வீசி இரு (3)
11. மேதகு மோகனன் மேனன்களோடு ஓடு நீக்குதல் முறையோ? (3)
14. சலசலப்புக்கு அஞ்சாத பனங்காட்டு நரிக்கு இரட்டைக் கிளவியைப் பார்த்ததும் ஒரே குதூகலம் தான் (6)
15. இதை இத்தோடு விட்டுத் தொலைக்க (1, 3)
16. மற்போர் வீரன் (4)
மேலிருந்து கீழ்
1. மத்திய தளத்தில் ஒருவித பறையிசை (5)
2. காத்திருப்போர் முகவரி சைதாப்பேட்டையில் (3)
3. சிறு மின்சாதனப் பெட்டிக்குள் சின்னப் பெண் ஒருத்தி (3)
6. திடமாகு – உடலில் பெரும் ஆற்றல் வந்திட, மாங்கு மாங்கு என்று ஒற்று நீக்கி உறுதி பெறு (4)
7. காவலரைத் திரும்பிப் பார்த்துத் திகை (2)
9. சொத்தைப் பல் கடலதில் ஒன்று விட்டு ஒன்றைப் பிடுங்கியத்தை ஒருவாறு கலந்து நிறைய சொல் (2, 2, 2)
10. எடை பார்த்தால் நேசம் ஆயிரம் (5)
12. ஆசைப் பட்டவளை அடைய நினைத்து, கடைசியில் அகப்பட்டுக் கொண்டால் தீருமோ கவலை (2, 2)
13. பருந்துக்கும் யானைக்கும் நடுவில் கை வைத்தால் என்ன விரோதமா? (3)
இலக்யா குறுக்கெழுத்து 21
இலக்யா குறுக்கெழுத்து 20-க்கான விடைகளைக் காண இங்கே சொடுக்கவும்.
இனி இன்றைய குறுக்கெழுத்துப் புதிர்:
இடமிருந்து வலம்
1. ஆகாயத்தின் எல்லையை எப்படியும் எட்டிப் பிடித்து விடுவான் (4)
3. மாவுப் பொருளுக்கு வண்ணம் கொடு (1,1)
7. ஒரு மதிப்பெண் கூட இழக்கவில்லை (5, 2)
9. நெற்றிப் பொட்டு (4)
10. உரக்கலவை சில களைகளையும் நீக்கியதால் ஏற்பட்ட மகிழ்ச்சி (3)
11. தான் நெற்றியில் சூடிய அணிகலனின் பெருமையை ஊரெல்லாம் முரசு அடித்துச் சொல்லாத குறைதான் (6)
12. சினிமா சினிமா என்ற பிதற்றல் தெளிவதற்குள் பங்குனியே வந்து விடுகிறது (2)
15. பாறை இடுக்கினுள் சற்றே உற்றுப் பார்த்தால் ஒரு பெரும் படையே தங்கியிருக்கிறது (3)
16. கம்பி திருடும் கள்வனைப் பார்த்ததும் கம்மென்று தப்பித்து வந்திடு (5)
17. ஓலைச் சுவடியில் எழுதும் பேனா? (2)
மேலிருந்து கீழ்
1. மொத்த விலை கொடுத்து சரடு வாங்கிக் கோர்த்தால் சங்க இலக்கிய புத்தகம் ஒன்று கிடைக்கிறது (2, 2)
2. முதல் இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு வந்த இல்லற வாட்டம் பந்த சொந்தங்களையும் குழப்பி, அறம் அறுக, பறக்க முடியாத பருவமாய் ஆக்கி விட்டது (5, 4)
4. மனதார கைகளுக்குள் பார்த்தால் விண்மீன் தெரியும் (3)
5. கூட்டணி கட்சிகளுடன் செய்யப்படும் ஒப்பந்தம் (3, 5)
6. வசீகரத்தால் அவளை மயக்கம் கொள்ளச் செய் (3,1)
8. நூல் அதிகம் சேர்ந்து விட்டதனால் தினம் போய் படிப்பது நலம் (4)
11. ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் சின்ன வித்தியாசம் தான் (4)
13. மிகச்சிறு வாணிபத்தில் பணம் ஆறாக ஓடுகிறது (4)
14. எடையைக் கொண்டு வெற்றிடம் நிரப்பு (2)
விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.
இலக்யா குறுக்கெழுத்து 20
இலக்யா குறுக்கெழுத்து 19-க்கான விடைகளைக் காண இங்கே சொடுக்கவும்.
இனி இன்றைய குறுக்கெழுத்துப் புதிர்:
இடமிருந்து வலம்
1. வணிகப் பொருளுடன் ஒன்றைச் சேர்த்ததும் தங்க மழை பொழியும் பூ கிடைக்கிறது! (6)
4. கன்னிக்கு முதன்முதலாய் விரித்த வலை வருத்தத்தையே தந்தது (3)
5. உண்ணும் வேட்கை இருந்தும் உணவு இல்லாததால் தன்னிலை மறந்தது (2, 5)
6. பொறுப்பு மிக்க நிலை வேண்டி கொஞ்சம் பரிதவி (3)
8. திருப்பூருக்கு மிக அருகில் சென்றதும் பயணத்தின் திசையை மாற்ற வேண்டும் (4)
9. அக்னியைக் கண்டம் விட்டு இதைச் செய் (4, 2)
10. நீர் பகிர்வில் நீதியின் நீட்சி குறைந்த போதிலும் நம்மிடம் தான் வருகிறது ஆறு (2)
12. நினைவில் இருந்து அகற்று (2)
13. வான்வெளி எங்கும் குழப்பத்தில் விரவிக் கிடக்கிறது கோம்பள பிரதேசம் (4)
15. மரக்கிளைகளில் ஒருவகை பூச்சிகளால் சேர்த்து வைக்கப் பட்டுள்ள இனிப்புத் தொகுப்பு (2, 3)
16. தூமகேதுவின் குறும்புப் பகுதி? (2)
மேலிருந்து கீழ்
1. மாற்று சாதித் திருமணமானாலும் மணமக்களின் பெற்றோர் ஒன்றாக அமர்ந்து உண்ணலாம் (5)
2. தென்கிழக்கு ஆசியப் பகுதியில் முதல் வல்லொற்றை அகற்றிக் கொக்கரி தீய பற்பம் அடைந்த பிளவைச் சரிசெய்ய (3, 6)
3. சாலைக்குக் கொம்புகள் முளைத்ததால் கானகம் உருவானது (2)
4. சம்பளத்தில் முதல் தவணையைக் கட்டினால் நல்ல போர்வை கிடைக்கலாம் (5)
7. விரிவுரையில் சந்தேகம் தீர்க்க அதிவேகத் தொடர்வண்டியில் ஏற வேண்டியது தான் (3, 3)
10. வடமொழியை நீக்கி விட்டால் நமஸ்தே கூட எனக்கும் உங்களுக்கும் சொந்தமாகி விடும் (3)
11. வேலையை உரிய நேரத்தில் செய்யக் கூடிய ஆற்றல் [இயற்பியல்] (3)
14. சின்ன கோபாலனின் உயரம் கோபுரம் அளவில் பாதி (2)
விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.
இலக்யா குறுக்கெழுத்து 19
இடமிருந்து வலம்
1. வீதி முகவரி தெளிவாய்ப் புரிய ஒளிகொண்டு எடுத்துச் சொல் (2,4)
5. ஒரே வகையான அணுக்களைக் கொண்ட தனிப்பொருள் (4)
6. பயணத்தில் நேர்ந்த குழப்பத்தால் கேட்ட பொருளைக் கொடுத்தால் தான் வீடு வந்து சேர முடியும் (4)
7. பெறும் செல்வத்தை எல்லாம் பெரும் செல்வமாய்ப் போட்டு வை (2)
9. உன் தவிப்பு நீங்கித் தெளிவு பெற முதலில் தேவை கொஞ்சம் ஒத்தாசை (3)
10. வெடியைப் போட்டதால் நல்ல லாபம் (3)
11. விரைவாய் விரைவாய்! அவசரம்! (5)
14. வண்டிப் புகையைத் திரும்பிப் பார்த்த சாமா சந்தேகத்தில் கேட்ட கேள்வி (2)
16. ஆட்டுக்கல்லில் அமர்ந்த குழந்தை? (3)
17. ‘ஈயடிச்சான் காப்பி’ அடி (3,2)
மேலிருந்து கீழ்
1. நாட்டுப்புறப் பாட்டு வகை (5)
2. சுதந்திரம் வேண்டும் என்றால் விட்டுக் கொடு சிரத்தை (4)
3. இல்லற இன்பங்களை வள்ளுவர் கண்ணோட்டத்தில் பாவேந்தர் விளக்கிய காவியம்(4,4)
4. கரகாட்டக்காரன் நாயகி ஆடக் குறைந்த ஆடம்பரம் இளஞ்சிவப்பு மலரானது (7)
8. அவசரப் படாமல் நிதானமாக யோசித்தால் விடை கிடைக்கலாம் (5)
9. ஆடை- தகர்த்திடு (2)
12. பேரிளம்பெண்? (3)
13. வடமொழி சூரியன் (2)
15. உரை ________ பத்தினியை … (சிலப்பதிகாரம்) (2)
விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.
இலக்யா குறுக்கெழுத்து 18
இடமிருந்து வலம்
1. தலைவி திரும்ப வரப்போவதில்லை என்பதால் கட்சிக்கு இப்போதைக்கு இது தான் கதி (4)
3. இதை மக்களாட்சியின் திருவிழா என்கிறார்கள் (4)
4 & மேலிருந்து கீழ் 3. இருப்பிடம் கண்டுபிடி (2, 2)
5. விடுமுறை சூரியன்? (3)
7. அபிநந்தன் (3)
8. இனிய வாழ்வுக்கு அறுசுவையுடன் இந்த அணிகலனும் தேவை (5)
10. கொடுக்கும் தன்மை (2)
11 & மேலிருந்து கீழ் 10. எதிரிக்கு இணையாய் இருந்து சமாளி (2, 2)
12. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவிடும் வியாதி (3, 2)
13. நெகிழிப் பை இல்லாததால் மீண்டும் நமக்கு உதவுவது (3)
14. வாக்குகளை உறுதி செய்ய வேட்பாளர்கள் தரும் வாக்கு (5)
மேலிருந்து கீழ்
1. குற்றப் புலனாய்வு செய்யத் தேவையான அறிவியல் (6)
2. ஆராய்ச்சியாளர் (4)
3. இடமிருந்து வலம் 4-ஐ பார்க்கவும்
4. மார்ச் மாதம் ஆங்கிலத்தில் இப்படி வேகமாகக் கடந்து விடுகிறது (4)
6. தின்பண்டம் வாங்கப் பதிப்பகத்தின் இயந்திரத்தைத் திருகு (3, 4)
9. மதுரை ஆற்றில் கரம் பதி (2)
11. இடமிருந்து வலம் 10-ஐ பார்க்கவும்
விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.
கலைஞர் குறுக்கெழுத்து
பன்முகத் தன்மை கொண்டவரும், சமூக நீதி மலர்ந்திட உழைத்தவரும், இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் வித்தகருமான கலைஞர் கருணாநிதி அவர்களை மையமாக வைத்து இந்தக் குறுக்கெழுத்தை அமைத்திருக்கிறேன். ஒரு 13 x 13 கருப்பு-வெள்ளை கட்டத்திற்குள் அவரது இயல்புகளையும் சிறப்புகளையும் அடக்குவது என்பது இயலாத காரியம். அவரது உடன்பிறப்புகள் மட்டுமன்றி அவரைப் பற்றிய பொது அறிவு கொண்டவர்கள், மற்றும் குறுக்கெழுத்து ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் முயற்சிக்கும் வண்ணம் இந்தப் புதிரை உருவாக்க முயன்றுள்ளேன். பிழைகள் இருப்பின் தெரிவிக்கவும். உங்கள் விடைகளை வழக்கம் போல் vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.
இடமிருந்து வலம்:
1. கோட்டூர்புரத்தில் ஒரு புத்தகக் கோட்டை (3, 4)
2. ‘தென்றலைத் தீண்டியதில்லை நான், தீயைத் தாண்டியிருக்கிறேன்’ – வசனம் இடம்பெற்ற படம் (5)
5. மூன்றாம் பாலினத்தவருக்கு நல வாரியம் அமைத்த கலைஞர், அவர்களுக்கு வழங்கிய பெயர் (7)
6. குண்டலகேசியைத் தழுவி கலைஞர் எழுதி எம். ஜி. ஆர் நடித்த திரைப்படப் பெயரில் இரண்டாம் பாதி (3)
8. சமூக நீதி வேண்டுமாயின் அனைவரும் ஆகலாம் ________ (6)
10. தன் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்துக் கலைஞர் எழுதியது (5, 2)
12. மாநில முதல்வர்களுக்கு இதை ஏற்றிட உரிமை உண்டெனப் போராடி வென்றார் கலைஞர் (6)
14. ‘மூன்றாம் தர ஆட்சி’ என்ற விமர்சனத்துக்குப் பதில் அளிக்கையில் ‘இல்லை இல்லை, இது __________ தர ஆட்சி’ என்று பெருமையுடன் சொன்னார் (4)
15. விவசாயிகளுக்குக் கலைஞர் கொடுத்த ஒரு இன்ப அதிர்ச்சி (4, 5)
மேலிருந்து கீழ்:
1. இலங்கையில் இம்சை செய்த இந்தச் சேனையை வரவேற்க மறுத்தார் (6)
3. கலைஞரின் பூமழை போன்ற சீரான சொற்பொழிவை இப்படியும் சொல்லலாம் (4)
4. நாத்திகர் ஓடச் செய்த தேர் கொண்ட ஊர் (5)
7. உடல் ஊனமுற்றோர்க்கு இவரளித்த மாற்றுப் பெயர் (8)
8. இதயம் இரவலாகத் தந்தவர் (3)
9. அரசியல் தண்டவாளத்தில் கலைஞரின் ரயிலைத் துவக்கிய டால்மியாபுரம் (6)
11. கிரிக்கெட் பிரியர் ஹேட்ரிக் அடித்த தொகுதி (6)
13. அலைகடலென பொதுக்கூட்டம் (3)
கீழிருந்து மேல்:
16. இந்தச் சனி மறைந்தால் தான் சமத்துவ ஞாயிறு பிறக்கும் (2)
விடைகளும் விளக்கங்களும் விரைவில்…
தமிழ் குறுக்கெழுத்து 14
பொன்னியின் செல்வன் படிக்காதவர்களும் பிடிக்காதவர்களும் (யாராவது இருந்தால்) புதிர் 13-ஐ விரும்பியிருக்க மாட்டார்கள். அதே வேளை தமிழ் ‘தி இந்து’வில் இந்த தளத்தைப் பற்றிய பதிவு ‘நெட்டெழுத்து’ பகுதியில் வந்தமையால் பல புதிய நண்பர்கள் வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது (அந்த பதிவை இங்கே படிக்கலாம்). மீண்டும் ஒரு ‘பொதுவான’ குறுக்கெழுத்துப் புதிர் இதோ. சில நேரடி குறிப்புகள், சில பொது அறிவு குறிப்புகள், சில பிறழ்மொழிகள்… தமிழில் கலக்குங்கள்.
விடைகளையும் விமர்சனங்களையும் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் அனுப்பவும். vijayshankar.twwi@gmail.com
இடமிருந்து வலம்
1. சேர சோழ பாண்டியர் பற்றி 2700 பாடல்கள் – அனைத்தும் கிடைக்கவில்லை, ஆனால் தொகை மாறவில்லை (7)
4. பேச்சு வாக்கில் காய்ந்து முற்றுப் போலியான மருதாணி (4)
6. வடமொழி மேன்மையைப் பறித்த போதிலும் பெயரில் இவள் நாயகி (2)
8. இனி என்ன செய்வது என்பதை ஒரு மார்க்கமாகக் கேள் (2,3)
10. என்ன தைரியம் – எல்லோரும் பார்த்திருக்கையில் ஆடை மீது கை வைக்க (5)
11. மு. கருணாநிதி துவக்கி வைத்த இன்ப வெளிப்பாடு (7)
14. சூரிய உதயம் காட்டும் பருவப் பெண்? (3)
15. கதை சொல்லி ஆடும் நடனம் (4)
17. ஶ்ரீரங்கம் ரங்கராஜன் (3)
19. தேனீக்கள் தந்ததல்லடீ, இது வேறு (3)
20. தீய்ந்தாலும் சுவையான படிவு (4)
22. இறுதியாகவே நடந்த குழப்பத்தில் முடி வேக வா (5)
24. வானிலிருந்து அப்பம் வேண்டி எழுதிய கடிதம் (6)
25. இந்திய ஏவுகணை மனிதருக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை தரலாம் (6)
மேலிருந்து கீழ்
1. முழுக்க முழுக்க போதையில் எரிந்ததால் ளகர மயக்கத்தில் அணைந்த்த தீபம் (2,2,4)
2. மதுக்கடைகளை மூடினாலும் தொந்தரவு பல (3,2 அல்லது 5)
3. செய்து பாராளுமன்றத்தின் அழகைக் கெடுக்கும் அமளி (3)
4. கருஞ்சாயக் கண்? (3)
5. பாரதி அழைத்த குட்டிப் பறவையே (6,3)
6. இஞ்சி இடுப்பழகன் (6)
11. முதுமையின் இருப்பிடம், சுருக்கெழுத்தில் (4)
12. விருது (3)
13. சுப்பு ரத்தின தாசன் (3)
16. அண்மையில் ட்விட்டரில் தமிழர் கீச்சி அசத்திய வாழ்த்து (3,3)
18. பாரதி (4)
19. மற்றதைப் படிக்கும் அதே வாரம் இந்த சைவப் பதிகங்களையும் படிக்க முயன்றேன் (4)
22. சேலைத் தலைப்புக்கும் முன்னால் வந்து (3)
23. யானை (3)
தமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன்
தமிழில் ஈடு இணையற்ற வரலாற்றுப் புதினம் அமரர் கல்கி செதுக்கிய பொன்னியின் செல்வன். வரலாற்றுத் தகவல்கள், மறக்க முடியாத கதை மாந்தர், திகில் திருப்பங்கள் என்று ஒரு நெடுந்தொடர் கதைக்குத் தேவையான எல்லா இயல்புகளும் அமைந்த இந்தக் காவியத்தைப் படித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பது என் கருத்து. Themed crossword செய்ய வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. பொன்னியின் செல்வனில் இல்லாத புதிர்களா? கதையைப் படித்தவர்களுக்கு ஒருசில சுவாரசியமான நிகழ்வுகளை நினைவுகூர ஒரு வாய்ப்பு. இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள் ஆழ்வார்க்கடியான் போல கூகுள் முழுவதும் ஒற்றறிந்து விடைகளைக் கண்டுபிடிக்கலாம். சோழர்களின் வேகத்துடன் விரைவாக விடைகளை நிரப்புங்கள். விடைகளைக் கண்டுபிடித்து விட்டு ஊமையரசி போல் இருந்து விடாமல் வந்தியத்தேவனிடம் ஒரு மின்னோலையை vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு அல்லது இந்தப் புதிரின் கீழே பின்னூட்டத்தில் கொடுத்தனுப்புங்கள்.
இடமிருந்து வலம்
1. கட்டையுமாய் குட்டையுமாய் வைரம் பாய்ந்த திருமேனியும் கையில் குண்டாந்தடியும் கொண்டவன் (9)
5. குந்தவையும் வந்தியத்தேவனும் முதன்முறை சந்தித்த ஊர் (4)
7. நம்பியின் இயற்பெயர் (4)
8. கலங்கரை விளக்கத்தில் தீபமேற்றுபவர் (8)
10. சம்புவரையர் மாளிகையில் வந்தியத்தேவன் கண்ட ஆடல்-பாடல் (7)
11. வந்தியத்தேவனைப் பலமுறை காப்பாற்றிய, சிலமுறை சிக்க வைத்த பழுவூர் முத்திரை (2)
13. குந்தவை மற்றும் வானதியைக் காப்பாற்ற இதன் மீது வந்தியத்தேவன் வெட்டியாக வேலெறிய வேண்டியதாயிற்று (3)
14. வந்தியத்தேவனை ஈழத்துக்கு அழைத்துச் செல்லப் பூங்குழலி செய்த எம்.ஜி.ஆர். வேலை (5)
17. (வலமிருந்து இடம்) சுரங்கப் பாதையில் சென்ற வந்தியத்தேவன் கண்டுபிடித்த செல்வக் களஞ்சியம் திரும்பியிருக்கிறது (4)
18. திருக்கோவலூர் மலையமானும் ஆதித்த கரிகாலனும் மனம்விட்டுப் பேசிப் பிரிந்து சென்ற அழகிய இடம் (8)
மேலிருந்து கீழ்
1. பொன்னியின் செல்வன் காவியம் தொடங்கிடும் நன்னாள் (7)
2. அருள்மொழிவர்மனைத் தன் வசப்படுத்திய கொடும்பாளூர் இளவரசியின் சுய நினைவின்மை (3,5)
3. ஈழத்தில் சீன யாத்திரீகர்களுடன் வந்த யாகப்பானையின் இரண்டாம் கடைசி மறைய, கலைந்தது ராஜராஜனின் கோலம் (6)
4. பழுவூர் இளையராணி குறுகிட வருவதோ மகாதேவரின் வாகனம் (3)
6. பல்லக்கில் பவனி வரும் பேரழகி (4)
9. வந்தியத்தேவனுக்கு நிகழவிருக்கும் ஆபத்தை மணிமேகலை முன்கூட்டியே உணர்ந்த விதம் (3)
10. ராஜராஜனின் தமக்கையை இங்கே அமர வை (4)
11. தலைநகரம் (4)
12. வந்தியத்தேவன் பூங்குழலியைச் சந்திக்கும் இடம் (5)
15. பகைவர்க்கு எமனாம் பொன்னியின் செல்வன் (3)
16. வந்தியத்தேவனின் விலாவில் பாய்ந்த ஆயுதம் (3)
12-ஆம் வகுப்பு இயற்பியல் குறுக்கெழுத்து
12-ஆம் வகுப்பு இயற்பியல் என்றதும் அன்பர்கள் தெறித்து ஓட வேண்டாம். இளம் மாணவர்களை ஊக்குவிக்க எத்தனையோ வழி இருக்கிறது. அவர்களுக்கு குறுக்கெழுத்து ஆர்வம் கொண்டு வரும் அதே வேளையில் ‘படிக்காம என்னடா கட்டம் கட்டி விளையாடுற?’ என்று பெற்றோர் கேட்டால் ‘இயற்பியல் போட்டி தான் அம்மா. இதெல்லாம் பாடத்தில் இருப்பது தான்’ என்று காரணம் சொல்ல ஒரு வாய்ப்பு. விடைகள் மற்றும் விமர்சனங்கள் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் (vijayshankar.twwi@gmail.com) வரட்டும். நான் இதுவரை அமைத்ததிலேயே மோசமான குறுக்கெழுத்து இதுவாகத் தான் இருக்கும். அதனால் என்ன? ஓரிரு மாணவர்கள் முயற்சித்தால் அதுவே ஒரு வெற்றி தானே.
இடமிருந்து வலம்:
1. ஒளி எடுத்துக் கொண்ட selfie? (6)
5. சிறு பொடி தான். ஆனால் கனமும் நிறையும் உண்டு. (3)
6. பக்தனின் வாயில் உலோக ஊசி குத்தி எடுத்த அளவு (3)
8. நிறை (3)
9 & மேலிருந்து கீழ் 5. பிளமிங்க் மூன்று விரல்களால் விளக்கிய மின்னியற்றின் தலையெழுத்து (4,3,2)
11. தொலைதொடர்பில் துல்லியம் பெற அலைவடிவம் பெற்ற குண மாற்றம் (6)
மேலிருந்து கீழ்:
2. இந்த இயற்பியல் பயணத்தில் வெறும் வேகம் மட்டும் அல்ல, இலக்கை அடையும் பாதையும் முக்கியம் (5)
3. ஒடிந்த வில்லுக்கும் ஒளி சிதறுகையில் அலைநீள மாற்றத்துக்கும் காரணம் (3, 3)
4. (இடமிருந்து வலம் 9-ஐ பார்க்கவும்)
6 & 9. ஒன்றன் பின் ஒன்றாய் வரும் ஏற்ற இறக்கங்கள் – அதிர்வெண் எல்லைகளுக்குள் அகப்பட்டன (2,3)
7. மின்னூட்டத்தை சேமித்து வைத்திருக்கும் கருவி (3)
9. (மேலிருந்து கீழ் 6-ஐ பார்க்கவும்)
10. மின்தடையால் வந்த பிரணவ ஒலி (2)
இலக்யா குறுக்கெழுத்து 11
மகாமகம் ஆகப் போகிறது, போன குறுக்கெழுத்துப் புதிர் பதித்து. தெரிந்த கொஞ்சம் யுத்திகளும் மறந்து விட்டது. Symmetry மாறாமல், இரண்டெழுத்துச் சொற்கள் வராமல், எந்த சொல்லும் தனிமையில் தொங்காமல் எப்படியோ ஒரு புதிர் அமைத்துள்ளேன். ஓரிரு அருஞ்சொற்கள், பிறழ்மொழிகள் (anagrams), என்னைக் கொல்லத் தூண்டும் கடி ஜோக்குகள் (!) என்று உங்கள் நேரத்தைக் கடன் வாங்க என்னுடைய இன்னொரு முயற்சி. விடைகளையும் விமர்சனங்களையும் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் அனுப்பவும். vijayshankar.twwi@gmail.com இடமிருந்து வலம் 1. கேள்விச் செல்வம் வந்தடையும் பாதை? (2,2) 3. போர் பயிற்சி முடிக்க வாத்து பட்ட பாட்டை என்ன சொல்ல? (4) 6. தறிகெட்டு ஆடடி வேடம் கலைந்திட (3) 7. தட்பவெப்பம் தெரிந்து கொள்ள நிபுணரின் தன்னிலை வாக்கை அறி, தன்னை நீக்கி (3,4) 9. தமிழ் கடவுளின் திருவடியில் விடை தேடு (3,2) 10. எப்போதும் பார்வையில் படும்படி அமர் (2,2,2) 14. நய வஞ்சகன் சூழ்ச்சி செய்ய வந்தான் – கரிய படம் புவியரசன் தலையும் சேர (4,3) 16. பெண்ணாம் பெரியதாம் (3) 17. ஊர்களை வட்டமிடு லாவகமாக (4) 18. கரையான்களுக்குப் பிடித்த இலக்கியம்? (2,2) மேலிருந்து கீழ் 1. மங்கள்யான் தோஷம்? (4) 2. அடர்ந்த, வானுயர்ந்த சோலை (3) 3. குரைக்கும் நாய் கடிக்க வராது என்றால் குறைக்கத நாய் …… (4,3) 4. பேச்சு வழக்கில் குடிக்கூலி கேள் (3,1) 5. மழை நீர் சொட்ட கொஞ்சமே கொஞ்சம் மது போதும் (4) 6. பனிரெண்டு ஆக இத்தனை முறை நதியில் அமர் (3) 8. தமிழர் தமிழை அதிகம் பயன்படுத்தாதது பாரதிதாசனின் உவமை நஞ்சாகி விடும் என்பதாலா? (7) 10. நேரம் கடத்த அரட்டை அடி (2,2) 11. ஆறுமுகம் திரும்பிய போதும் எண்ணிக்கை மாறவில்லை (4) 12. இடது புறம் (3) 13. அறுபத்து நான்கு, பெயரெச்சம் (4) 15. சிட்டுக் குருவியின் முட்டை போன்ற பூக்களைக் கொண்ட மரம் (3)