தமிழ் குறுக்கெழுத்து – 3


முன்பொரு காலத்தில் பதித்த இரண்டாவது குறுக்கெழுத்து

கொஞ்சம் கடினம் என்று  நண்பர்கள் கூறியதால் இப்போது சற்று எளிய புதிர் ஒன்றைத் தர நினைக்கிறேன்.

நேரம் கிடைக்கும் போது முயற்சி செய்து பாருங்களேன்.

 இடமிருந்து வலம்:

1. கொம்பு ஒடிந்ததும் பறக்கிறது பேருந்து (4)

3. நெருப்புக்குப் பிறகு மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்பு (5)

6. அரசரை வியங்கோள் வினைமுற்று கொண்டு அழைத்தல் (4, 3)

7. பொறி (3)

9. தூங்கா நகரத்தை இப்படியும் உச்சரிக்கிறார்கள் (3)

10. காடும் காடு சார்ந்த நிலமும் (3)

11. எதிர்மறை பெயரெச்சம் ஈறு கெட்ட போதிலும் உதிராத மணி (5)

13. அறுசுவைகளில் ஒன்று (5)

14. தன் நாட்டில் கதியற்றதால் தஞ்சம் கோருபவர் (3)

17. இரண்டு புள்ளிகளை இணைக்கும் குறைந்தபட்ச தூரத்தின் பாதை (4)

18. இதை முடிக்க நீங்கள் இரவெல்லாம் யோசிக்க வேண்டும் (3, 3)

மேலிருந்து கீழ்:

1 . ஜூன் 1 -ல் எதிர்பார்க்கப்படும், முகப்பரு இல்லாத வாலிப சாரல்? (3,2 )

2 . இவர்களுக்குத் துப்பாய தூஉம் மழை (6)

3 . இன்னும் அழியாமல் இருக்கிறதா என்று தெரியாத விலங்குகளை இப்படியும் அழைக்கலாமோ? (8)

4. அழகி (2)

5. கண்ணதாசன் (5)

7. ‘Apple of the eye’ வகை செல்லப் பெண். (4)

10. ரஜினி படம் பாண்டியன் சிலம்பில்! (3)

12.அழை, call பண்ணு, வரச் சொல்லு (4)

15. காமராஜரால் கண் பெற்றது (3)

16.மின்னலைத் தொடர்ந்து வருவது (2)

5 comments on “தமிழ் குறுக்கெழுத்து – 3

பின்னூட்டமொன்றை இடுக