பொன்னியின் செல்வனால் ஈர்க்கப்பட்டு பலரும் இந்த குறுக்கெழுத்தில் குதித்ததில் மகிழ்ச்சி. ஒருசில விளக்கங்கள் மற்றும் விடைகள்:
மே.கீ. 2 – அருள்மொழிவர்மனைத் தன் வசப்படுத்திய கொடும்பாளூர் இளவரசியின் சுய நினைவின்மை – கொடும்பாளூர் இளவரசியி வானதி; சுய நினைவின்மை (இங்கே காதல்) – மயக்கம் – வானதி மயக்கம்.
மே.கீ. 3 – ஈழத்தில் சீன யாத்திரீகர்களுடன் வந்த யாகப்பானையின் இரண்டாம் கடைசி மறைய, கலைந்தது ராஜராஜனின் கோலம்
யாகப்பானையின் இரண்டாம் கடைசி மறைய – யாகப்பானை – கலைந்திட (பிறழ்மொழி/anagram) – யானைப்பாகன்
மே.கீ. 4 – பழுவூர் இளையராணி (நந்தினி) குறுகிட வருவதோ மகாதேவரின் வாகனம் – நந்தி
மற்ற விடைகளைப் பொன்னியின் செல்வன் படித்த நினைவினாலோ கூகுள் உதவியாலோ நீங்கள் கண்டுபிடிக்கலாம்.
சரியான விடைகளை அனுப்பியோர்:
வாழ்த்துக்கள். அடுத்த புதிரில் சந்திப்போம்.